*மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள்..*
வருவதும் போவதும் இரண்டு - இன்பமும், துன்பமும்.
வந்தால் போகாதது இரண்டு - புகழும், பழியும்.
போனால் வராதது இரண்டு - மானமும், உயிரும்.
தானாக வருவது இரண்டு - இளமையும், முதுமையும்.
உடன் வருவது இரண்டு - புண்ணியமும், பாவமும்.
அடக்க முடியாதது இரண்டு - ஆசையும், துக்கமும்.
தவிர்க்க முடியாதது இரண்டு - பசியும், தாகமும்.
பிரிக்க முடியாதது இரண்டு - பந்தமும், பாசமும்.
இழிவைத் தருவது இரண்டு - பொறாமையும், கோபமும்.
அனைவருக்கும் சமமாவது இரண்டு - பிறப்பும், இறப்பும்.
இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.
No comments:
Post a Comment