தானம்

தானத்தில் சிறந்தது அன்னதானம்...!!

மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய தானம், நிதானம். '#பதறாத காரியம் சிதறாது" என்பார்கள். அதேபோல் நிதானத்தோடு இருந்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.

தானத்தில், #நிதானம் முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியமானது பிறரின் பசியை போக்கும் அன்னதானம். மனிதன், 'போதும்" என்று சொல்லக்கூடிய ஒரே தானம், அன்னதானம் தான்.

அன்னதானத்தின் #சிறப்பு :

ஒருவரிடத்தில் பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், பணம் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் தரலாமே என மனம் எதிர்பார்க்குமே தவிர, #போதும் என்று சொல்வதில்லை.

ஆனால், சாப்பிடும்போது வயிறு நிறைந்தவுடன் போதும் என்று கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒருவருக்கு வயிறார உணவை அளித்தால், #மனம் நிம்மதி பெறும்.

இதை பெரும்பாலானோர் அனுபவத்தில் உணர்ந்து இருப்பார்கள்.

'#போதும்" என்ற சொல்லே, அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான #செல்வத்தை கொடுக்குமாம். எனவேதான், எல்லா தானங்களிலும் அன்னதானமே சிறந்தது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்னதானம் செய்யும்போது, பிறர் 'போதும்" என்று சொல்லும் அளவிற்கு செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் பரிமாற வேண்டும்.

தங்கள் கரங்களால் #பரிமாறுவதே சிறப்பு.

பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட சிறிய அளவில் தங்களால் முடிந்ததை செய்யலாம்.

அன்னதானத்தை தங்கள் மேற்பார்வையில் முறையாக செய்ய வேண்டும்.

இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.

அன்னதானம் செய்ய இயலாதவர்கள், '#பசி" என்று சொல்லி வருபவர்களுக்கு முகமலர்ச்சியோடு உணவளித்தாலே போதும்.

அதுவே அன்னதானத்திற்கு சமமானதுதான். இதனால் இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து, எந்நாளும் உதவி செய்வான் என்பது உண்மை.

அதன்மூலம் அவர்களது ₹ஆத்மாக்கள் திருப்தியுடன் நம்மை வாழ்த்துகிறது.

அன்னதானத்தால் கிடைக்கும் #பலன்கள் :

#அன்புடனும், கருணையுடனும் செய்யும் அன்னதானங்கள், நம்முடைய அடுத்த #பிறவி வரை பலன் கொடுக்கும்.

அன்னதானம் செய்பவர்களின் #வாழ்க்கையில் பசிப்பிணி வராது.

இறைவனின் #பரிபூரண அருளும் கிடைக்கப்பெறும்.

#தானத்தில் #அன்னதானம் #நிதானம்  #தானம் #போதும்

No comments:

Post a Comment

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...