Ads

ads header

Ad Code

Google adsense

Wednesday, May 29, 2024

Anaemia : Causes, Impact, and recent developments

Anaemia: Causes, Impact, and Recent Developments
Anaemia is a condition characterized by a deficiency of red blood cells or hemoglobin in the blood. It affects millions of people worldwide and can have serious health implications. Let’s delve into the details:


Causes of Anaemia:
Iron Deficiency: The most common cause of anaemia is iron deficiency. Iron is essential for hemoglobin production, and insufficient iron levels lead to decreased red blood cell formation.
Nutritional Deficiencies: Apart from iron, deficiencies in other nutrients like vitamin B12, folic acid, and vitamin C can also contribute to anaemia.
Chronic Diseases: Conditions such as chronic kidney disease, inflammatory disorders, and certain cancers can disrupt red blood cell production.
Inherited Disorders: Some genetic conditions affect hemoglobin synthesis, leading to various types of anaemia.
Impact of Anaemia:
Health Risks: Anaemia increases the risk of infections, impairs cognitive function, and causes extreme fatigue.
Poor Pregnancy Outcomes: Pregnant women with anaemia are at higher risk of complications during childbirth.
Economic Burden: Anaemia affects productivity due to fatigue and loss of earnings.
Recent News:
WHO’s Comprehensive Framework: In May 2023, the World Health Organization (WHO) launched its first-ever comprehensive framework to reduce anaemia. The framework emphasizes a multi-sectoral approach, addressing not only iron deficiency but also other causes1.
Anaemia Prevalence in India: According to the National Family Health Survey, anaemia cases have increased across age groups and genders in India. The government is closely examining its “Anaemia Mukt Bharat” program to tackle this issue2.
Remember, addressing anaemia requires a holistic approach, including nutrition, healthcare, and awareness.

நல்ல நட்பு


*' நல்ல நட்பே..''*

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம்.*

அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம்.*

சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள்.*

நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும்.*

5 வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ஆயுள் முழுக்கத் தொடர்ந்து வருவது நமக்கு கவுரவம் கூட.*

இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், ஏமாற்றங்களைத் துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே..*

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்.*

கடனுக்குப் பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.*

மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார்.*

அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.*

ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்,” என்று கேட்டார்.*

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.*

பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான்.*

”அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்,” என்று யோசனை கூறினான்.*

திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா? என்ற தயக்கம்…தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.*

சிறிது நேரம் சிந்தித்தவன், “”தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை.” என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.*

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம், ””எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான்.*

கடைக்காரரோ,””ஏன் இப்படிக் கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால் தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால் பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை,” என்றார்.*

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது.“ உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே..*

வாழ்நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றான்.*

கடைக்காரர்,, ''நீ சொல்வது புரியவில்லையே!”, என்றார்.*

”ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன்.என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.. ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது.*

இனி ஒருநாளும் திருட மாட்டேன்,” என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.*

*ஆம்.தோழர்களே..,*

*ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும்,, நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும்.*

*ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ் பெற்றிருக்க முடியும்.*

*அப்படிப்பட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.✍🏼🌹*

Tuesday, May 28, 2024

Heart burn

*Natural Treatments for Heartburn Symptoms*

 Improve Your Diet and Avoid Trigger Foods

Research suggests that foods that tend to make heartburn worse, and therefore should be avoided, include:

Processed foods high in things like salt, sugar, refined oils and synthetic additives

Caffeinated drinks

Carbonated beverages, sugary drinks or energy drinks

Too much added sugar and artificial sweeteners

Fried foods and vegetable oils, including canola oil

Spicy foods (cooks use sauces and msg spices👎)

Sometimes acid foods like citrus fruits, garlic, onions and tomatoes

Take one tablespoon of apple cider vinegar with just a very small amount of water prior to eating.

Consume more fresh organic vegetables (especially leafy greens, squash, artichoke, asparagus and cucumbers), free-range chicken and grass-fed beef, probiotic foods like yogurt, bone broth, healthy fats like coconut or olive oil, parsley, ginger, and fennel.

Licorice root extract is often used to relieve symptoms of indigestion, such as acid reflux, upset stomach, and heartburn.

 In a 30-day study in 50 adults with indigestion, taking a licorice capsule twice daily resulted in significant improvements in symptoms, compared with a placebo.

Take licorice root (Healthaholics brand) capsules 20 minutes before a meal.

இரத்த அழுத்தம்

*இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை* 

 உப்பு சேர்க்காமல் எலுமிச்சம் பழம் சாற்றை 1டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும் 

10 பூண்டை பாலில் கலந்து கொதிக்க வைத்து பூண்டை மட்டும் சாப்பிடவும் 

முதல் நாள் ஊற வைத்த வெந்திய தண்ணீரை மறுநாள் ஒரு டம்ளர் அளவில் வெறும் வயிற்றில் குடிக்கவும்

 5 சின்ன வெங்காயம் பச்சையாக காலையில் சாப்பிடவும்

 பெரிய நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிடவும் 

வாரம் மூன்று நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும்

 கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களை தினமும் ஒன்று சாப்பிடவும்

 வாழைப்பழம் தினமும் ஒன்று சாப்பிடவும்

 நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் கீரை வகைகளை சாப்பிடவும்

 வாரம் இரண்டு நாட்கள் முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம் சூப் செய்து சாப்பிடவும் 

தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்யவும்

 செம்பருத்தி பூவை தினமும் மூன்று சாப்பிடவும் 

மாதுளம் பழம் சாப்பிடவும்

 மஞ்சள் தூளை பாலில் கலந்து குடிக்கவும்

 கருவேப்பிலையை தினமும் இரண்டு கொத்து சாப்பிடவும்

 கொதிக்க வைத்த சீரக தண்ணீரை தினமும் இரண்டு டம்ளர் பருகவும் 

இஞ்சி , இலவங்கம், 2 டம்ளர் தண்ணீர், 2 பூண்டை கொதிக்க வைத்து அவற்றுடன் அரை ஸ்பூன் தேன் மற்றும் அரை எலுமிச்சம்பழத்தை கலந்து வாரம் ஒரு நாள் குடிக்கவும்

ஃஃஃஃஃஃ

*இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியது* 

உப்பை தவிர்க்க வேண்டும் 

ஊறுகாய் 
அப்பளம் 
பீசா பர்கர் 
ஐஸ்கிரீம் 
நூடுல்ஸ் 
சாஸ் சாக்லேட் 
 உப்பு சேர்த்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும் 

கருவாடு 
துரித உணவுகள் 
கிரீம் மிகுந்த கேக் வகைகள்
எண்ணெய்யில் வறுத்த உணவுகள் 
சிகரெட் மது கொழுப்பு அதிகம் உள்ள மாமிசம்

சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

🟥🟥🟥👇🟨🟨🟨

*நோயற்ற வாழ்வே*.. *குறைவற்ற செல்வம்*.. *நோயின்றி வாழ கற்றுக் கொள்வோம்*...

🟨🟨🟨👇🟥🟥🟥

*இரத்தக்_குழாய்_அடைப்பு_நீங்க*……

*இயற்கை_மருத்துவம்*.
 
❤ இரத்த குழாயில் கொழுப்பு, ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அது பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதயத்திற்கும், மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அதனால் தான் அவற்றில் இரத்தம் ஓட்டம் நடைபெறுகிறது. இரத்தம் குழாய்கள் உற்பத்தி குறையும்போது இரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது இரத்த குழாய்களில் கொழுப்பு படியதொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும், இதனால் மாரடைப்பு பக்கவாதம் ஏற்படக்காரணமாகிறது.
 
இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நாம் உண்ணும் உணவின் மூலம் இந்த இரத்த குழாய் அடைப்பு பிரச்சனையை சரி செய்து விட முடியும். அதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

 *இரத்தக் குழாய் அடைப்பு நீங்க*…
(Heart blood vessels blockage treatment)

*தினமும் இதை செய்யுங்க*.👇

இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது மெதுவான வேகத்தில் 🚶‍♂நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்பை குணப்படுத்தும் சில இயற்கை முறைகளை பற்றி பார்ப்போம்.

 *இதய அடைப்பை குணப்படுத்தும் முறைகள்*❓❗

💗தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

💗 உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்த இதய நோய் குணமாகும்.

💗சுருங்கிய இதய வால்வுகளில் இரத்தம் எளிதாக சென்று வர வெங்காயம் பெரிதும் உதவுகின்றது. எனவே தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை எடுத்து கொண்டால் அது உடலில் உள்ள கொழுப்பை கொஞ்சம் கொஞ்சமாககரைத்து இதய வால்வின் அடைப்பையும் குணப்படுத்தும்.

💗இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்கி மீண்டும் இரத்த குழாயில் அடைப்பு வராமலும் தடுக்க தினமும் 
5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர வேண்டும்.

💗1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் புண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர் எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன், சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து பாட்டலில் வைத்துக் கொள்ளுங்கள்.

 நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிமுறையாகும்.

💗இதய வால்வு அடைப்பு பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட தினமும் ஒரு கப் மோர் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

💗இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. எனவே இஞ்சி சாருடன் தேன் எலுமிச்சை சாறு சர்க்கரை கலந்து தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும்.

.
❤ இதயஅடைப்பு நீங்க மருந்து ❤

இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் மருந்து.

👉 *தேவையானபொருள்*

வெண்தாமரை இலை – 4 பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு

👉செய்முறை❓

வெண் தாமரை இலையை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து தாமரை இலையுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும். 

இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது. 

.
*இதய படப்படப்பு நீங்க செம்பருத்தி*

செம்பருத்திப்பூ – 10 எண்ணிக்கை

மிளகு – 5

ஏலக்காய் – 2

 ஒரு 400 ml நீரில் செம்பருத்திப்பூ, மிளகு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து 100மிலியாக சுண்ட காய்ச்சி அதிகாலையில் அருந்த இதய படபடப்பு, இதய வலி, இதய வால்வுகளில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை குணமாகும்.
 
செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, தாமரைப்பூ ஆகியவற்றை சம அளவு கலந்து கொதிக்க வைத்து அதிகாலையில் சாப்பிட இதய நோய் தீரும்.

.
*இரத்தக் குழாய் அடைப்பு நீங்க* 

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 1/2 டம்பளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் இடித்த இரண்டு பற்கள் பூண்டு மற்றும் சிறிதளவு இஞ்சி, சிறிதளவு இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.

இறுதியாக பானத்தை அடுப்பில் இருந்து இறக்கும் போது அரை எலுமிச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த பானத்துடன் சேர்த்து கொள்ளவும்.

மிதமான சூட்டில் பானத்தை வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
 
இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் வரை அருந்தி வர இரத்த குழாயில் சேரும் கொழுப்புகள் மற்றும் அடைப்புகள் நீங்கும்.

💗அதேபோல் தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர இரத்த குழாய் அடைப்பு நீங்கும். மேலும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் சீரகம் பொடியை சேர்த்து 12 மணி நேரம் ஊறவைத்து குடித்தால் இரத்த அழுத்தம் நீங்கும்.

💗ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை பழம் சாற்றை பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.
 
💗அகத்திக்கீரையை வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம், இரத்த குழாய் அடைப்பு போன்றவை குணமாகும்.

💗கருவேப்பிலையை நன்கு அரைத்துப் சாறு எடுத்து கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வர இரத்த குழாய் அடைப்பு நீங்க ஆரம்பிக்கும்.

💗இதய வால்வுகளில் உள்ள அடைப்புகள் நீங்கி மீண்டும் இரத்த குழாயில் அடைப்புகள் வராமல் இருக்க, 5 பூண்டு பற்களை இடித்து பாலுடன் கொதிக்க வைத்து அருந்துங்கள்.

.
*ரத்தக் கொதிப்பு நீங்க.*..

💗ரத்த அழுத்தமே (இல்) இரத்தக் கொதிப்பு எனப் படுகிறது. ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக் கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.

💗மருதமரப் பட்டை 200 கிராம், 

சீரகம் 100 கிராம், 

சோம்பு 100 கிராம், 

மஞ்சள் 100 கிராம் 

இவற்றை ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவர, ரத்த அழுத் தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.

.
❤இதயநோய் குணமாக...❤

💗இதய நோய்களை மிக எளிதில் குணமாக்கும் வல்லமை மருத மரத்திற்கு உண்டு. இதய நோய்களுக்கு உண்டு வரும் நவீன மருந்துகளுடன், மருதம் சார்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரலாம். மருத மரம் வீரியமான ரசாயனமல்ல என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் கண்டிப்பாகச் சாப்பிடத் தயங்கமாட்டீர்கள்.

💊மருதம்பட்டை, 
தாமரைப்பூ வகைக்கு 200 கிராம். 

ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப் பட்டை வகைக்கு 20 கிராம். 

இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை, இரவு என இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, இதய பலவீனம், இதயத்தில் உண்டாகும் வலி, இதய வீக்கம், இதயக் குழாய் களில் உண்டாகும் அடைப்பு போன்றவை அதிசயமாய் நீங்கும்.

மேற்சொன்ன மருந்தையே கசாயமிட்டும் சாப்பிட்டு வரலாம். கடைகளில் கிடைக்கும் மருத மரம் சார்ந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கலாம். நம் பண்டைய ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படும் "அர்ஜுனா அரிஸ்டம்' என்ற திரவ மருந்து மருந்துக் கடைகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இதில் 20 மி.லி. அளவு காலை, இரவு என இருவேளையும் சாப்பிட்டு வர, இதய நோய்கள், ரத்தம் சார்ந்த நோய்கள் உடனே தீரும்.

 #தொப்பையை_குறைக்க_உதவும்_சலபாசனம்...!

சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.

வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.

#செய்முறை:
 
குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும், மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கிக் கொள்ளவும். கைகளை தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு ஐந்து முதல் பத்து வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓவ்வொரு காலாக தூக்கி பழகலாம்.
 
#பலன்கள்:
 
வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.

  #நன்றி : #வெப்துனியா

தயிர் Curd

*தயிர் + சர்க்கரை பயன்கள்* தினமும் காலையில் ஒரு பௌல் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!!

இந்தியர்களின் தினசரி உணவில் இடம் பெறும் முக்கியமான ஒரு உணவுப் பொருள் தான் தயிர். பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் தயிர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கின்றன.

வடஇந்தியாவில் ஒரு பழக்கம் உள்ளது. அது வெளியே ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் போது, அந்த காரியம் வெற்றிகரமாக நடக்க தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்து கிளம்புவார்கள். இன்னும் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது.

அதேப் போல் கர்நாடகாவில் உள்ள ஹோட்டல்களில் மதிய உணவின் போது தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். ஏனெனில் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

ஆனால் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட சிறந்த நேரம் என்றால், அது காலை வேளை தான். இப்போது காலையில் ஒரு பௌல் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

குடல் ஆரோக்கியம் மேம்படும் :

தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அதுவும் தயிரை காலையில் சாப்பிடும் போது, அது குடலுக்கு இன்னும் நன்மை அளிக்கிறது. அதுவும் இது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. நல்ல பாக்டீரியாக்களானது பொதுவான வயிற்று பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பளிப்பதோடு, குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

சிறுநீர் பாதை தொற்றிற்கு நல்லது :

சிறுநீர் பாதை தொற்று பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை. இது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்வடிகுழாயை பாதிக்கிறது. சிறுநீர் பாதை தொற்றினால் பாதிக்கப்படும் போது, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சலை சந்திக்க நேரிடும்.

ஆனால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பௌல் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், இந்த எரிச்சலுணர்வைக் குறைக்கலாம். ஏனெனில் தயிர் சிறுநீர்ப்பையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தயிரில் வைட்டமின் ஏ, ஈ, சி, பி2, பி12 மற்றும் கரோட்டினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத சத்துக்களாகும். நீங்கள் குறைவாக நீரைக் குடிப்பீர்களானால், தினமும் காலையில் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

எளிதில் செரிமானமாகும் :

என்ன தான் பாலில் இருந்து தயிர் பெறப்பட்டாலும், பாலை விட தயிர் வேகமாக செரிமானமாகும் என்பது தெரியுமா? தயிரில் உள்ள புரோட்டீன் எளிதில் செரிமானமாகக்கூடியவை. எனவே காலை உணவின் போது பாலுக்கு பதிலாக தயிரை சேர்த்துக் கொள்வது நல்லது.

உடனடி ஆற்றல் கிடைக்கும் :

நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் இஇருக்க வேண்டுமானால், உடலுக்கு போதுமான அளவு க்ளுக்கோஸ் அவசியம் தேவை. சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடியவை. அப்படிப்பட்ட சர்க்கரையை ஒரு பௌல் தயிருடன் சேர்த்து காலையில் உட்கொள்ளும் போது, உடலின் ஆற்றலுக்கு வேண்டிய க்ளுக்கோஸ் கிடைத்து, நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம்.

உடல் குளிர்ச்சியாக இருக்கும் :

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல், அஜீரண கோளாறு, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால், தினமும் உணவில் தயிரை சேர்க்க வேண்டும். அதுவும் காலையில் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அனைத்துவிதமான செரிமான பிரச்சனைகளும் தடுக்கப்படுவதோடு, வயிறும், உடலும் குளிர்ச்சியாக இருக்கும். ஒருவரது செரிமானம் சிறப்பாக இருந்தால், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டுமானால், தினமும் காலையில் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள்.

மனதில் கொள்ள வேண்டியவை
என்ன தான் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நன்மையளித்தாலும், சிலருக்கு இது மோசமான விளைவை ஏற்படுத்தும். அதுவும் ஏற்கனவே சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் இதை உட்கொள்ளும் போது, நிலைமை இன்னும் மோசமாகும்.

அதேப் போல் சர்க்கரை நோயாளிகள் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அது சட்டென்று இரத்த சர்க்கரைஅளவை அதிகரித்துவிடும். இது தவிர உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையில் கலோரிகள் அதிகமாக உள்ளன.

Monday, May 27, 2024

லலிதாம்பிகை

லலிதா ஸகஸ்ரநாமம் கூறும் அம்பிகை உகந்த நைவேத்தியங்கள்....

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.

501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.

526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.

"முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.

"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.

இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.

"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம். 

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம். அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!

நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, துதித்து, தாயின் அருளை பெறுவோம்....

நிறைந்த வாழ்க்கை

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், 

இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,

அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,

அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,

நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது, 

கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,

 வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது,,,

கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,,

 சோகமே உருவாகி விட்டான்,,,
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந் தான், 

மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது,

 அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்,

 "ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக, 

இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே,

 அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்,,,

புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான், 

அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.

 வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்,

 "மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே, 

என்ன அது?"

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்

 "பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும்,

 இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு,

இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே"
என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்,

 "வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக,

 என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே,,,

 அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்,

 காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்,

 கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியா னான், 

வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்,,,

ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன, 

வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து!...
அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது,,,

தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி,,,

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து,

 எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.

மனைவி வந்தாள்,,,

கண்ணீரை துடைத்தாள்,,,

அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,

கண்ணீர் மல்க சொன்னாள்;

"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,

 விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,

 கரியாத்தானே ஆகியிருக்கு,

 நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.

ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் ஜெயிப்பான்.

ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான். - கவிஞர் வாலி

சதா உதாசினப்படுத்திகொண்டிருந்தால்
ஆரோக்கியமா இருக்கறவனுக்கு குளுகோஸ் தான் போடனும்.

ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.

ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறனும்.

படித்ததில் பிடித்தது....

Saturday, May 25, 2024

JRD டாட்டா

ஒரு நாள் கடும் மழையில் ஒரு மூதாட்டி குளிரில் நடுங்கியபடி பேருந்து நிலயத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு விலை உயர்ந்த ஆடம்பர கார் அந்த பேருந்து நிலயத்த்தின் ஓரமாக நின்றது.
கார் க்லாஸ்ஸை இறக்கி ஒரு sir. அம்மா நீங்க எங்க போகனும்.
மூதாட்டி- நான் ரொம்ப தூரம் போகனும் உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம். நான் பஸ் 
புடிச்சி போயிடறேன்.
மழைல பாம்‌பே புல்லா போக்குவரத்து ஸ்தம்பிச்சி போயிடுத்து. நீங்க எவ்ளோ நேரம் இங்க நின்னாலும் பஸ் வராது.
ஆட்டோ, taxi ஏதாவது புடிச்சி போனால் தான் உன்டு.
மூதாட்டி- அதுக்கு என் கைல காசு இல்லைங்க.
இளைஞர்- உங்க வீடு எங்க இருக்குனு சொல்லுங்க. என் வீட்டுக்கு பக்கத்துல உங்க வீடு இருந்தால் நான் உங்கள ட்ராப் பண்ணிடறேன்.
மூதாட்டி- தன் விலாசத்தை அந்த விசால மனம் படைத்த மனிதரிடம் கூறினார்.
அந்த இளைஞர் உங்கள் விட்டிற்கு மிக அருகில் தான் என் வீடு உள்ளது.
உங்களை ட்ராப் பண்றதுல எனக்கு எந்த சிரமமும் இல்லை. வண்டியில் ஏறுங்கள் என்று கூறி அந்த மூதாட்டிக்கு கார் கதவை திறந்து விட்டு அவரை மும்பை சேரி பகுதியில் இறக்கி விட்டார்.
அந்த மூதாட்டி அவருக்கு கை கூப்பி நன்றியை சொல்லி விட்டு உங்க கிட்ட நான் பஸ் ஸ்டாண்ட் லயே கேக்ணும்னு நினைச்சேன்.
இளைஞர்- என்ன விஷயம் கேளுங்க.
மூதாட்டி- உண்மையிலேயே உங்க வீடு இந்த குப்பத்திற்கு பக்கத்துலயா இருக்கு.
உங்களை பார்த்தால் அப்படி தெரியலையே.
இளைஞர்- ஆமாம். அப்படி சொன்னதால் தான நீங்க வண்டில ஏறினீங்க.
மூதாட்டி- உங்க பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமா.
இளைஞர்- JRD டாட்டா.
இவர் வெளிநாடு சென்ற பொழுது. 
இந்தியர்களுக்கு ரூம் இல்லை என்று ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லில் சொன்னார்கள்.
பின்னர் இந்தியா வந்து. இந்தியாவின் முதல் ஸ்டார் ஹோட்டலான தாஜ் கட்டி.
இந்தியர்களுக்கே இடம் என்றார்.
இவரை எந்த ஹோட்டல் அவமதித்ததோ.
அதே ஹோட்டல் உரிமையாளர் வேலை நிமித்தமாக இந்தியா வந்து தாஜ் ஹோட்டல்லில் ரூம் கேட்டார்.
அவருக்கு JRD டாட்டா ரூம் கொடுக்கவில்லை.
இந்தியாவின் முதல் இரும்பாலையை நிறுவியவரும் இவரே.
இந்தியர்கள் தயாரிக்கும் இரும்புகளை பல்லால் கடித்தே உண்ணலாம் என்று வெளி நாட்டவர் முதலில் ஏளனம் செய்து.
பின் இவரிடமே ஸ்டீல் ஆர்டர் எடுத்தனர்.
இவர் பிறந்தது மறைந்தது இரண்டும் nov 29இல்.

World news paper

காலம் பதில் சொல்லும்

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று 
கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின.  

அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. 

அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள் 
புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது.

''கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?'' என்று கேட்டது.

கரையான்கள் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியேவரும் என்று கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன.  

''புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் என் விஷத்துக்கு இரையாவீர்கள் என்று மிரட்டியது பாம்பு.

சோகத்தோடு கிளம்பின கரையான்கள். வழியில் சாதுவை சந்தித்து நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்டன. சாது பாம்பிடம் பேசினார்.  

''பாம்பே! புற்றை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உனக்கில்லை. அடுத்தவன் உழைப்பை திருடுகிறாயே, அடுத்தவன் உழைப்பை பலத்தால் பெறுவது நியாயமல்ல என்றார்.

பாம்பு பேசியது.

சாதுவே! உலகத்தில் பலசாளிகள் வைத்ததுதான் சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா? பலசாளியிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.

கரையான்கள் அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தன. சாதுவும் நகர்ந்தார். சில மாதங்கள் சென்றன.  

பாம்பு தனது குடும்பத்தோடு புற்றில் 
வசதியாக வசித்து வந்தது.  

ஒரு நாள் பாம்பு தனது குட்டிகளோடு புற்றிற்கு வெளியில் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த பருந்து பாம்பை கொத்திக்கொண்டு பறந்தது. குட்டிகள் கதறின. வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்து பொத்தென்று பாம்பை கீழே போட்டது.  

பாம்பு விழுந்த இடம் சாதுவின் ஆசிரம வாசல். உயிர் பிரியும் தருவாயில் சாதுவிடம் பேசியது பாம்பு.  
சாதுவே! நான் இல்லாமல் குட்டிகளால் வாழ முடியாது. ஆகவே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது.
  
அதற்கு சாது 'பாம்பே! விதி சொல்லிக்கொடுக்கும் பாடம் ஒன்றைத் தெரிந்துகொள். வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. இன்று எவற்றையெல்லாம் பலமாக உணர்கிறாயோ, அவற்றையெல்லாம் நாளை பலவீனமாக உணர்வாய். அதே போல, இன்று பலவீனமாக பார்க்கப்படுபவை பலமாக மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.  

ஆகையால், பலவானாக இருக்கும்போது பக்குவமாகவும், பிறருக்கு கெடுதல் 
செய்யாமலும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நீ அப்படி வாழவில்லை. கரையான் என்ற வலிமையில்லாத எதிரியை நீ தேர்ந்தெடுத்தாலும், பருந்து என்ற பலமான எதிரிக்கு பதில் சொல்லும் நிலைக்கு காலம் உன்னை தள்ளியிருக்கிறது''.  

''பாம்பே! நிதர்சனமான ஒரு உண்மையைத் தெரிந்துகொள். அடுத்தவனை வருத்தி, அதை ரசிக்கும் உன் குணத்தை இந்த உலகம் வேண்டுமானால் மறந்து போகலாம். ஆனால், நீ கீழே விழும்போது காலம் அதை உன் நினைவில் கொண்டு வரும்.   

அப்போது அதை தாங்கும் சக்தி உனக்கோ, உன் சந்ததிகளுக்கோ இருக்காது. உன் சந்ததிகள் உன் பாவத்தை பங்காக பிரித்துக்கொள்வார்கள்'' என்று சொல்லிவிட்டு சாது சென்றார்.  

அதற்குப் பிறகு பாம்பு என்ன செய்தது என்பது நமக்கு முக்கியமல்ல. காரணம் காலம் அதை தன் பிடியில் எடுத்துச் சென்றுவிட்டது. பலம் பொறுந்திய ஒருவனின் அராஜகம், அகந்தை, கோபம் ஆகியவற்றை காலம் ஒருநாள் எடுத்துச் சென்றுவிடும். அப்போது உணர்ந்து பார்க்கலாம் என்றால் காலம் அதற்கு 
இடம் தராது ...

Thursday, May 23, 2024

அருள் தரும் முருகர் !

பழநி மலை முருகன் பற்றிய அதிசய தகவல்கள்
முருகன் 108 போற்றி
1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

15. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
===============================
பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்... 

ஒரு சொட்டு வியர்வை துளி குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்: 

உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை

கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம்.

அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!

அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு ஆவினன் குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.

போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.

லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!

அந்த வியர்வை பெருக்கெடுத்து ஆறாக ஓடும்!அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது.
அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.

மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும்.இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.
இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப் படுகிறது.

அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள்.கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி.இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.

இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.

அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது.
இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப் படுகிறது.

 தற்போது, மலை மீது காணப் படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.

கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.

மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.

அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.

இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப் பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது.

பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப் படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!..
===============================
முருகன் 108 போற்றி!!!

ஓம் ஆறுமுகனே போற்றி

ஓம் ஆண்டியே போற்றி

ஓம் அரன் மகனே போற்றி

ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி

ஓம் அழகா போற்றி

ஓம் அபயா போற்றி

ஓம் ஆதிமூலமே போற்றி

ஓம் ஆவினன் குடியோய் போற்றி

ஓம் இறைவனே போற்றி

ஓம் இளையவனே போற்றி (10)

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி

ஓம் ஈசன் மைந்தனே போற்றி

ஓம் ஈராறு கண்ணனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஒன்றே போற்றி

ஓம் ஓங்காரனே போற்றி (20)

ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி

ஓம் ஔவைக்கருளியவனே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

ஓம் கந்தனே போற்றி

ஓம் கடம்பனே போற்றி

ஓம் கவசப்பிரியனே போற்றி

ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

ஓம் கிரிராஜனே போற்றி

ஓம் கிருபாநிதியே போற்றி (30)

ஓம் குகனே போற்றி

ஓம் குமரனே போற்றி

ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

ஓம் குறத்தி நாதனே போற்றி

ஓம் குரவனே போற்றி

ஓம் குருபரனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

ஓம் சஷ்டி நாயகனே போற்றி

ஓம் சரவணபவனே போற்றி

ஓம் சரணாகதியே போற்றி (40)

ஓம் சத்ரு சங்காரனே போற்றி

ஓம் சர்வேஸ்வரனே போற்றி

ஓம் சிக்கல்பதியே போற்றி

ஓம் சிங்காரனே போற்றி

ஓம் சுப்பிரமணியனே போற்றி

ஓம் சுரபூபதியே போற்றி

ஓம் சுந்தரனே போற்றி

ஓம் சுகுமாரனே போற்றி

ஓம் சுவாமிநாதனே போற்றி

ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி (50)

ஓம் சூழ் ஒளியே போற்றி

ஓம் சூரசம்ஹாரனே போற்றி

ஓம் செல்வனே போற்றி

ஓம் செந்தூர்க்காவலனே போற்றி

ஓம் சேகரனே போற்றி

ஓம் சேவகனே போற்றி

ஓம் சேனாபதியே போற்றி

ஓம் சேவற்கொடியோனே போற்றி

ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி

ஓம் சோலையப்பனே போற்றி (60)

ஓம் ஞானியே போற்றி

ஓம் ஞாயிறே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞானோபதேசியே போற்றி

ஓம் தணிகாசலனே போற்றி

ஓம் தயாபரனே போற்றி

ஓம் தண்டாயுதபாணியே போற்றி

ஓம் தகப்பன் சாமியே போற்றி

ஓம் திருவே போற்றி

ஓம் திங்களே போற்றி (70)

ஓம் திருவருளே போற்றி

ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி

ஓம் துணைவா போற்றி

ஓம் துரந்தரா போற்றி

ஓம் தென்பரங்குன்றனே போற்றி

ஓம் தெவிட்டா இன்பமே போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தேவசேனாபதியே போற்றி

ஓம் தேவனே போற்றி

ஓம் தேயனே போற்றி (80)

ஓம் நாதனே போற்றி

ஓம் நிமலனே போற்றி

ஓம் நிறணந்தவனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பரப்பிரம்மமே போற்றி

ஓம் பழனியாண்டவனே போற்றி

ஓம் பாலகுமாரனே போற்றி

ஓம் பன்னிரு கையனே போற்றி

ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

ஓம் போகர் நாதனே போற்றி (90)

ஓம் போற்றப்படுவோனே போற்றி

ஓம் மறை நாயகனே போற்றி

ஓம் மயில் வாகனனே போற்றி

ஓம் மகா சேனனே போற்றி

ஓம் மருத மலையானே போற்றி

ஓம் மால் மருகனே போற்றி

ஓம் மாவித்தையே போற்றி

ஓம் முருகனே போற்றி

ஓம் மூவாப் பொருளே போற்றி

ஓம் யோக சித்தியே போற்றி (100)

ஓம் வயலூரானே போற்றி

ஓம் வள்ளி நாயகனே போற்றி

ஓம் விறலிமலையானே போற்றி

ஓம் வினாயகர் சோதரனே போற்றி

ஓம் வேலவனே போற்றி

ஓம் வேதமுதல்வனே போற்றி

ஓம் கலியுக வரதனே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி (108)

முருகனுக்கு அரோகரா!!!
==================================
நவபாஷாணம்

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். 
நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.

 அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். 

🌹🌹🌹🌹🌹💜🌹🌹🌹🌹🌹
*ஒன்பது பாஷாணங்கள்*
🌹🌹🌹🌹💜🌹🌹🌹🌹🌹🌹
*1.சாதிலிங்கம்.*

*2.மனோசிலை*

*3.காந்தம்*

*4.காரம்*

*5.கந்தகம்*

*6.பூரம்*

*7.வெள்ளை பாஷாணம்*

*8.கௌரி பாஷாணம்*

*9.தொட்டி பாஷாணம்*

இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.

 நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. 

பழனி மலைக்கோவில்,

கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். 

மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, 

இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுத பாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.🙏🙏🙏🙏

எதனால் கெடும் ...

🙏🙏✡️🌞✡️🙏🙏     
ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும் கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.. நன்றி ! சுபம் !

ஆஞ்சநேயர்


அஷ்டாம்ச ஆஞ்சநேயர் 

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.

 மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.

 மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. 
ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.

எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.

ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.  "ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள். ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். 
எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும், சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

 ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு. ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமைந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.

எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும், காட்சி தருகிறது. ஜீவநேந்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.
நன்றி ! சுபம் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உதவி செய்வோம்!

*……………………………………………*

*‘’உதவி செய்வோம்..’’*
*...........................................*

நாம் நமது வாழ்வில் பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் தூக்கிக் கொண்டு செல்கின்றோம். 

எது முக்கியம், எது தேவையற்றது என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்து விட்டால் , வாழ்வு எப்போதும் ஆனந்தமாக இருக்கும்..

துறவிகள் இருவர் தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டு இருந்தனர். 

மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் போது, வழியில் ஓர் அழகான இளம்பெண் சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

இதைக் கண்ட துறவிகளில் ஒருவர்,

 "என்னாயிற்று பெண்ணே? ஏதேனும் உதவி தேவையா?" என்று கேட்டார்.

பதிலுக்கு அந்தப் பெண், 

"நான் என் தோழியின் திருமணத்துக்குச் செல்ல உள்ளேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. 

நடந்து சென்றால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாடை பாழாகி விடும்" என்று கூறி வருந்தினாள்.

"கவலைப்படாதே, என் தோள்களின் மீது ஏறிக் கொள். நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்து விடுகின்றேன்" என்று கூறி விட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு துறவி கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது. 

'ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்?'' என்று கேட்க, 

அதற்கு அவர் ''நாம் ஒரு துறவி என்பதை மறந்து விட்டு அந்தப் பெண்ணை எப்படித் தொட்டுத் தூக்கலாம்? 

இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?" என்று கேட்டார்.

உதவி செய்த துறவி,

"தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் தோளில் இருந்து இறக்கி விட்டேன், நீங்கள் தான் அந்தச் சம்பவத்தை இறக்காமல் மனதில் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்"என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.

*ஆம்.,தோழர்களே..,*

*அடுத்தவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.* 

*மற்றவர்கள் செய்த உதவியை* *விமர்சிக்காமல்,* 
*உபத்திரவம்* *செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது..*

*முடிந்தவரை யாருக்கும் கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும்..* 

*நல்ல எண்ணம் கொண்டவர்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் வராது.✍🏼🌹*

Tuesday, May 21, 2024

வெற்றிலை பெட்டி மாத்திரை பெட்டி ஆனது...

*வெற்றிலைப் பெட்டி  மாத்திரைப் பெட்டியாக மாறிப் போனது ஏன்????*

பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தை கோல்கேட் பற்பசை கம்பெனி கடுமையாக விளம்பரம் செய்தது
 பற்கள் வெள்ளையாக இருந்தால் தான் சமுதாயம் மதிக்கும் என்ற அளவிற்கு பிரச்சாரம் செய்தார்கள் 
அதன் பாதிப்பு வெற்றிலைக்கு விடை கொடுத்தது.

 நமது மூதாதையர்களின் பற்கள் யாருக்கும் வெண்மையான பற்கள் இல்லை அனைவரும் வெற்றிலை போட கூடியவர்களாக இருந்தார்கள் இன்று நம்மை போன்று பெட்டி பெட்டியாக மாத்திரையை பயன்படுத்தியவர்கள் அல்ல அவர்கள் 
ஏனென்றால் வயோதிகத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தில் தீர்வு இருந்தது நல்ல ஜீரண தன்மையை வெற்றிலை ஏற்படுத்தியது முதுமையில் ஏற்படக்கூடிய சுண்ணாம்புச்சத்து இழப்பை வெற்றிலை பாக்கில் உள்ள சுண்ணாம்பு ஈடு செய்தது எந்த சிக்கலான உணவை சாப்பிட்டாலும் அதை ஜீரணமாகும் தன்மை வெற்றிலை என்னும் காரத்தன்மையுள்ள பொருளிலும் பாக்கு என்னும் துவர்ப்பு தன்மை உள்ள பொருளிலும் சுண்ணாம்பு என்னும் எரிப்பு தன்மை உள்ள பொருளிலும் கலந்து இருந்தது .
என்று தமிழர்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை ஆங்கில மருத்துவர்களின்  பேச்சைக்கேட்டு கை விட்டார்களோ அன்றே இவர்களுக்கு பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்தது சர்க்கரை நோய் மிக அதிகமாக பரவியதற்க்கு வெற்றிலை போடும் பழக்கத்தை கை விட்டதும் ஒரு காரணமாகும்.

  இந்த வெற்றிலை போடும் நல்ல பழக்கத்தை ஒழித்துக் கட்டுவதில் ஆங்கில மருத்துவர்கள் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் காரணம் இந்த பழக்கம் இருந்தால் அவர்களுக்கு வருமானமே கிடைக்காது என்பதுதான் உண்மை.

எனவே வெற்றிலை போடும் பழக்கத்தை இனி அனைவரும் கடைபிடிக்கவும்...

*வாழ்வை வாழ்வோம் இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 8754792156, 9284964104*  

எளிமையான வாழ்க்கை

🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐🌹
……………………………………

*''எளிமையான வாழ்க்கை...!"*
.......................................

ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான்...! 

அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான்...

எளிமை என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு. 
எளிமைதான் எத்தனை வகை...?

பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி எளிமை, உணவு எளிமை என்று பலவகை எளிமைகள் இருக்கின்றன...

_*பொருள் எளிமை (Material Simplicity) :*_
......................................

ஒருவர் பெருஞ் செல்வந்தராக இருப்பார். ஆனால்!, தன்னுடைய செல்வப் பகட்டை வெளிப்படுத்தவில்லை என்றால் அவர்தான் எளிமைக்குச் சொந்தக்காரர்...

அவர் சாதாரண தட்டில்தான் சாப்பிடுவார். அவருக்குத் தெரியும், வெள்ளித் தட்டில் சாப்பிட்டாலும், சாதாரணத் தட்டில் சாப்பிட்டாலும் உண்பது உணவைத்தானே தவிர, தட்டையல்ல...!

அவர் உடையிலும் எளிமை தெரியும். பயன்படுத்தும் பொருட்களிலும் எளிமைத் தெரியும்...

_*நடத்தையில் எளிமை (Behavioural Simplicity):*_
......................................

நடத்தை எளிமை என்பது எவரிடமும் எளிமையாகப் பழகுவது, சாதாரண மனிதராக சமுதாயத்தில் கருதப்படுபவரையும், தன்னுடன் பழக அனுமதி அளிப்பது...

பாகுபாடு இன்றி அனைவரையும் அன்புடன் மரியாதையுடன் நடத்துவது, எப்போதும், எங்கேயும் பொறுமை காட்டுவது...

_*செயல்முறையில் எளிமை (Procedural Simplicity) :*_
......................................

செயல்முறை எளிமை என்பது தன் அலுவலகத்திலும் மற்றும் எந்தச் செயலிலும் எளிமையைக் கடைபிடிப்பது, செயல்திட்டங்களை எளிமைப்படுத்துவது...

எதையும், எவரும் எளிதாகப் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தகவல்களைத் தருவது. சட்டங்கள் மற்றும் நியதிகளை எளிமையாக்குவது. எந்தச் செயலைச் செய்தாலும் அவற்றை எளிய முறையில் செய்தல்...

_*உணவில் எளிமை (Food Simplicity) :*_
......................................

உடலும் உள்ளமும் நலம் பெறுவகையிலான எளிய உணவினை உண்ணுதல். நான்கு அங்குல நாவின் சுவை பசிக்காக ஆறடி உடலைப் பாழடிக்காமல் எளிமை உணவு உண்பது...

_*மொழியில் எளிமை ((Dress Simplicity):*_
......................................

இறுதியாக, ஆனால்!, மிக முக்கியமாக மொழியில் எளிமை கடைபிடிப்பது...

மொழி எளிமை என்பது, நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகள் அனைத்தும், அனைவருக்கும் குறிப்பாக அந்த தகவல்களைப் பெறுபவர்களில் மிகச் சாதாரண அறிவுடைய மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது...

*ஆம் தோழர்களே...!*

*எளிமை என்பது ஏழ்மை அல்ல. அற்புதமான வாழ்க்கைக்கு வேர்...!*

*எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, நோயற்ற உடல், நிறைந்த செல்வம், போட்டி - பொறாமையற்ற சமுதாயத்தை உருவாக்கலாம்...!.!✍🏼🌹*

Monday, May 20, 2024

உடலுக்கு உள்ளே...

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..! 

ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!

ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!

உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்
பிடி சாம்பலாகி விடும்..!

புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்....அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்...!

ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..!

ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே...!

அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..!

உன் அக குடும்பம் சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!

உன் உள் குடும்பம் உன் உடலே!

அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு..!

ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை...!

காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே
சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!

உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே பூஜை..!

உடலுக்கு உள் சென்று உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..!

உடல் அனுமதித்தால் தான் ஒருவன் சித்தனும் ஆக முடியும்..!

ஒருவன் எப்படி பட்டவன் ஆக வேண்டும் என்று தீர்மானிப்பது அவனின் எண்ணங்களே..!

ஆனால் அந்த எண்ணங்களை தீர்மானிப்பது உடலே..!

ஒருவன் எதுவாக ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே...!

ஒருவன் உண்ணும் உணவும் பேணி காக்கும் உடலும் அழைத்து செல்லும் அதன் அதன் தன்மைக்கு ஏற்ப..!

ஒருவன் அவன் உள் குடும்பமான உடலை கவனித்தால்..!

அந்த உள் குடும்பமே உன் வெளி குடும்பத்தை காக்கும்..!

பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் குலத்தின் குலதெய்வம் அவரின் உடலே..!

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

தியானம் நம் மனதோடு பேச செய்யும்.

ஆசனம் நம் உடலோடு பேச செய்யும்.

அதை தேடு...!!

இந்த தத்துவத்தை திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்...

        "தன் உடலை காக்காதவன் புழுவாய் புழு புழுத்து இறப்பார்" என்று கூறியுள்ளார்...

கால தேவி

*ஒருவருடைய கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில் பற்றி தெரியுமா???*

 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள *காலதேவி அம்மன்* சிலை.

 இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! 

ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. 

அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? 

அதுவும் நம்மூரில்!

 அதுதான் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் *”நேரமே உலகம்”*

புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். 

இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. - காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு. 

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

 சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. 

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். 

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. 

கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும்.

கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை. 

காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.

 மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும். 

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு. 

ஏன் என்றால் இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது. விழாக்காலத்தில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.
பயன் பெருங்கள்.. 🙏✍🏼🌹

பூமி மீது....

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்.

அற்புதமான வரிகள்..மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்..

மலைகளை வெட்டுகிறீர்களா? நன்றாக வெட்டுங்கள். பெருங்கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத்திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும். 
இமயமலை கூட பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

எரிவாயு எடுக்கிறீர்களா? நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா? நன்றாகத் துப்புங்கள். ஒரே ஒரு நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே விழுங்கிக் கொள்ளும். அந்த உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ பூமியால் மாற்றப்படும்.

காடுகளை அழிக்கிறீர்களா? நன்றாக அழியுங்கள். ஒரே ஒரு பெருமழை, காடுகளை அழித்து உங்களையும் அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் கட்டி வைத்தக் கட்டடங்களையும் விழுங்கிச் செரித்துவிடும். ஆகப்பெரிய அரண்மனைகளின் மதில்களில் கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.

பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். அதற்குப் பின்னர், முன்னேற்றம் ,வளர்ச்சி போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில் சிதைந்துகிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.

நிறுத்திக்கொள்ளுங்கள்.. பூமியை சீர்குலைக்கும் அனைத்து அழிவு எண்ணங்களையும் திட்டங்களையும் நிறுத்திக்கொள்ளுங்கள்.... 
நிறுத்திவிட்டு நீ உன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்.. 
இல்லாவிடில் பூமி தன்னை காப்பாற்றிக்கொள்ள உன்னை கொல்லும் சூழலை உருவாக்கும்...

நீ எதை பூமிக்கு செய்கிறாயோ அதன் அடிப்படையிலேயே பூமியும் தன்னை தகவமைக்கும்..
உங்கள் வருங்கால சந்ததிகள் மேல் பாசம் இருப்பின் அவர்களின் மீது உண்மையான அன்பு இருப்பின் அவர்களின் கஷ்டத்தை உங்களால் பார்க்க முடியாது என்பது உண்மையெனில் அவர்களுக்காக பூமி மீது இன்றே உங்கள் அன்பை வெளிப்படுத்த துவங்குங்கள்..
நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் அடுத்த தலைமுறைக்கு பூமி தன்னுடைய அளவிலாத அன்பின் மூலமாக சந்தோஷங்களையும் ஆரோக்கியத்தையும் தந்துகொண்டே இருக்கும்..

பரந்த பூமியை பசுமை பூமி ஆக்குவோம்...
அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியத்தை பரிசளிப்போம்..

தேனீக்கள் தினம் மே 20

மே 20 தேனீகள் தினம்

தேன் பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது, மேலும் தேனீ அதன் உற்பத்தியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பழங்காலத்திலிருந்தே ஒரு மருந்தாக உதவியாக இருந்து இன்று மகிழ்ச்சிகரமான சூப்பர் ஃபுட் என்று அங்கீகரிக்கப்படுவது வரை , தேன் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாக இருந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இது உலகெங்கிலும் உள்ள பல வீடுகளில் வற்றாத விருப்பமாக இருந்து வருகிறது, ஏனெனில் இது நம் பானங்கள் மற்றும் உணவுகளுக்கு இனிப்பு மற்றும் சுவையை சேர்க்கிறது, ஆனால் கண்ணை சந்திக்கும் தேனில் இன்னும் நிறைய இருக்கிறது. தேன் என்பது நாம் அனைவரும் அறிந்த மற்றும் பயன்படுத்தும் ஒரு நன்கு அறியப்பட்ட பொருளாகும், ஆனால் அரிதாகவே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காலையில் நாம் தோசைக்கல்லில் வைக்கும் இனிப்பு, தங்க நிற தேன் எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அல்லது அதை உருவாக்கும் சிறிய ஆனால் வலிமைமிக்க உயிரினங்களைப் பற்றி என்ன - தேனீக்கள்? தேனீக்களிலிருந்து தேன் வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் தேனை உருவாக்கும் செயல்முறை மற்றும் தேனீக்கள் ஆகிய இரண்டிற்கும் பின்னால் உள்ள கண்கவர் உண்மைகளை நம்மில் பலர் புரிந்து கொள்ளவில்லை.
இந்த வலைப்பதிவில், தேனீக்கள் மற்றும் தேன் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத சில அற்புதமான மற்றும் அரிய உண்மைகளை நாங்கள் ஆராய்வோம். இந்த பஞ்சுபோன்ற சிறிய உயிரினங்களைப் பற்றிய அனைத்து அற்புதமான தகவல்களிலும் முழுக்கு போடுங்கள்!

சுவாரஸ்யமான உண்மைகள்:

தேன் என்றென்றும் சேமிக்கப்படும்.

நீங்கள் கேட்டது சரிதான், தேன் என்பது கெட்டுப்போகாத சில அரிய உணவு. பண்டைய எகிப்திய கல்லறைகளில் தேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் அது உண்ணக்கூடியதாக உள்ளது. ஒருமுறை நன்றாக பேக் செய்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைத்தால், தேன் எண்ணற்ற ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படும். ஏனெனில் தேனில் ஹைட்ரஜன் பெராக்சைடை உற்பத்தி செய்யும் என்சைம் உள்ளது, இது இயற்கையான பாதுகாப்பாளராக செயல்படுகிறது.

தேன் வகைகளின் உலகம் மிகப்பெரியது.

நீங்கள் சாதாரண தேனை மட்டுமே உட்கொண்டிருந்தால், பல சுவைகளின் மகிழ்ச்சியை நீங்கள் இழக்கிறீர்கள். 300 க்கும் மேற்பட்ட தேன் வகைகள் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான சுவை, நிறம் மற்றும் அனுபவத்துடன் உள்ளன. தேனின் சுவை எந்த மூலத்திலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. தேன் வகைகள் இருண்ட அல்லது ஒளி நிழல் மற்றும் வலுவான மற்றும் லேசான சுவை சுயவிவரங்களில் கூட மாறுபடும். மூலத்தைத் தவிர, தேனின் சுவை காலநிலை, மழை மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்தது.
அஜ்வைன் தேன் , காபி தேன் மற்றும் பெர்ரி தேன் ஆகியவை கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய சில வகைகளாகும் . இந்த தேன் ஒரு திருப்திகரமான அனுபவத்தை வழங்கும் பணக்கார சுவைகளைக் கொண்டுள்ளது.

தேன் அடிப்படையில் இரண்டு வகைப்படும்.

சுவைகள் மற்றும் வண்ணங்களைப் போலவே, தேன் வகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. சந்தையில் கிடைக்கும் தேன் பெரும்பாலும் மோனோஃப்ளோரல் (அக்கா யூனிஃப்ளோரல்) மற்றும் பல மலர்கள் என இரண்டு வகைகளாகும். மோனோஃப்ளோரல் தேன் ஒற்றை மலர் வகையிலிருந்து பெறப்படுகிறது, எ.கா: லிச்சி தேனின் தேன் லிச்சி தோட்டங்களில் இருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது. மறுபுறம், பல மலர் தேனில் இருந்து தேன் பல்வேறு வகையான பூக்களில் இருந்து உறிஞ்சப்படுகிறது, எ.கா: கருமையான காடு தேன் ஒரு உன்னதமான பல மலர் தேன் ஆகும், இது ஒரு விதிவிலக்கான சுவையை வழங்குகிறது.

தேனீக்கள் தேன் தயாரிக்க மிகவும் கடினமாக உழைக்கின்றன.

'ஒரு பிஸியான தேனீ', 'தேனீயைப் போல கடின உழைப்பாளி', இந்த சிறிய சூப்பர் உயிரினங்களின் விடாமுயற்சியின் தன்மையைப் பாராட்டுவதற்கு நாம் எத்தனை சொற்றொடர்கள், மேற்கோள்கள் மற்றும் உரிச்சொற்களைப் பயன்படுத்துகிறோம்? ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
சராசரியாக ஒரு தேன் கூடு ஒரு வருடத்தில் 30 முதல் 100 பவுண்டுகள் வரை தேனை உருவாக்கும். ஒவ்வொரு பவுண்டுக்கும், தேனீக்களின் காலனி 2 மில்லியன் பூக்களைப் பார்க்க வேண்டும், 500 மைல்கள் பயணிக்க வேண்டும் மற்றும் கடிகாரத்தைச் சுற்றி வேலை செய்ய வேண்டும். இந்த பாரிய எண்ணிக்கைக்கு 800 தேனீக்களின் கூட்டு பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்த சிறிய பூச்சிகள் மிகவும் அற்புதமானவை அல்லவா?

1/12 டீஸ்பூன் முழு வாழ்க்கை தேவைப்படுகிறது.

தேனீக்கள், கடினமாக உழைக்கும் உயிரினங்கள் தங்கள் வாழ்நாளில் தோராயமாக 1/12 தேக்கரண்டி தேனை மட்டுமே தயாரிக்கின்றன.

மந்திர மருத்துவ குணம் கொண்டது.

தேன் பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் நீர் ஆகியவற்றால் ஆனது, மேலும் இது ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் அதிக செறிவைக் கொண்டுள்ளது. இது கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் களஞ்சியமாகும். தேசிய தேன் வாரியத்தின் கூற்றுப்படி, இந்த இனிப்பு திரவம் கொலஸ்ட்ரால் இல்லாதது, சோடியம் இல்லாதது மற்றும் கொழுப்பு இல்லாதது.
தொண்டை புண் மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு பழங்கால தீர்வாக தேன் உள்ளது. தேனில் ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பதால், இது ஒரு பயனுள்ள காயத்தை குணப்படுத்துகிறது, இது தொற்றுநோயைத் தடுக்கிறது மற்றும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. அதிக குளுக்கோஸ் உள்ளடக்கம் இயற்கையான ஆற்றலை அதிகரிக்கும். சூப்பர் ஃபுட் தேன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சைப் பழத்துடன் தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், கூடுதல் கிலோ எடையைக் குறைக்கலாம்.
உங்கள் தோல் பராமரிப்பு DIY வழக்கத்தில் தேனின் நன்மைகளைச் சேர்ப்பது அல்லது அதனுடன் உட்செலுத்தப்பட்ட தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது கூட சருமத்தை மேலும் பளபளப்பாக மாற்றும்.

ஆரோக்கியமான இனிப்பு உபசரிப்பு.

இனிப்பு இருந்தாலும், தேன் உண்மையில் கிளைசெமிக் குறியீட்டில் குறைவாக உள்ளது, அதாவது இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உங்கள் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

தேனீக்கள் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

தேனீக்கள் தங்கள் கூட்டின் வெப்பநிலையை ஆண்டு முழுவதும் விரும்பிய 93-95 டிகிரியில் பராமரிக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன. ஹைவ் உள்ளே நிலையான வெப்பநிலையைக் கோரும் அவற்றின் குளிர்-இரத்த இயல்பு காரணமாக இது சாத்தியமாகும். குளிர்ந்த நாட்களில், தேனீக்கள் கூட்டமாக கூடி உடல் வெப்பத்தை உருவாக்கி, கூட்டில் உள்ள விரிசல்களை புரோபோலிஸ் மூலம் நிரப்புகின்றன. இருப்பினும், அது மிகவும் சூடாகும்போது, ​​​​அதைக் குளிர்விக்க, அவர்கள் தண்ணீரைச் சேகரித்து, அது ஆவியாகும் வரை நுழைவாயிலைச் சுற்றி விசிறி, ஒரு மத்திய ஏர் கண்டிஷனிங் அமைப்பு போன்ற ஒரு இனிமையான காற்று உள்ளே உருவாக்குகிறது.

நடனம் என்பது தேனீக்களின் தொடர்பு மொழி.

தேனீக்களுக்கு காதுகள் இல்லை, எனவே அவை எவ்வாறு செய்திகளை தங்கள் தேனீ கூட்டை கூட்டிச் செல்கின்றன? அவர்கள் சிறப்பு அசைவுகள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள், இது பிரபலமாக 'வாக்கிள் நடனம்' என்று அழைக்கப்படுகிறது. அமிர்தம் எங்கே கிடைக்கிறது, எவ்வளவு தூரம் மூலாதாரம் உள்ளது, ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறது போன்ற எந்த தகவலையும் அவர்கள் அனுப்ப விரும்பும் போதெல்லாம், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்கள் நடனமாடுகிறார்கள். ஒவ்வொரு செய்திக்கும், அவர்கள் வித்தியாசப்படுத்த வெவ்வேறு நடன அசைவுகள்.

தேனீக்களுக்கும் தேன் உணவாகும்.

தேனீக்கள் குளிர்காலத்தில் கூட்டை பராமரிக்க
 போதுமான தேன் இருப்பு இருப்பதாக உத்தரவாதம் அளிக்க அனைத்து கோடைகாலத்திலும் உழைக்கும். வெப்பநிலை குறையும் போது, ​​அவர்கள் ராணியைச் சுற்றி குழுவாகி, வெப்பத்தை உருவாக்க தங்கள் உடலை அதிர்வு செய்து, கலோரிகளை எரிக்கிறார்கள். அவர்கள் அதிக ஆற்றலை எரிப்பதால், அவர்களுக்கு சகிப்புத்தன்மையை நிரப்பவும், தொடர்ந்து செயல்படவும் கூடிய உணவு தேவைப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, தேன் அவர்களின் ஆற்றல் மட்டத்தை பராமரிக்க சிறந்த உணவாகும்.
இதனால் மனிதர்களும் தேனீக்களும் உட்கொள்ளும் ஒரே உணவாக தேன் உள்ளது.

சுருக்கமாக:

தேன் மற்றும் அதை உற்பத்தி செய்பவர்கள் பற்றிய சில கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான உண்மைகளை நாங்கள் ஆராய்ந்தோம். தேனீக்கள் நம்பமுடியாத உயிரினங்கள் மற்றும் தேன் ஒரு அதிசயமான பொருளாகும், பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளன. எனவே அடுத்த முறை தேன் ஒரு ஜாடியை வாங்குவது அல்லது அதை உங்கள் சமையல் குறிப்புகளில் பயன்படுத்துவது பற்றி நீங்கள் கருதும் போது, ​​இயற்கையின் சிறிய சூப்பர் ஹீரோக்கள் எவ்வளவு கடினமாக உழைத்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இந்த தங்க விருந்து உண்மையில் எவ்வளவு அற்புதமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Saturday, May 18, 2024

நல்லெண்ணெய்

*நல்லெண்ணெய்*

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்.

1. ஆரோக்கிய இதயம் :-

 நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

2. நீரிழிவு :-

 நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

3. வலுவான எலும்புகள் :-

 நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

4. செரிமான பிரச்சனை :-

  மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

5. சுவாசக் கோளாறு :-

 நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

6. இரத்த அழுத்தம் :-

 நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

7. பளிச் பற்கள் :-

 தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

8. புற்றுநோய் :-

 நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

9. அழகான சருமம் :-

 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

10. புரோட்டீன் :-

 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.

மாடுகள் எப்பொழுது தூங்கும்?

*மாடுகள் எப்போது உறங்கும்?*( படித்ததில் பிடித்த ஒரு தத்துவ சிறு கதை )"பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்...பல பிரச்சனைகள்...வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது...தூங்கமுடியவில்லை...எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி"என்றவாறே அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.அப்போது மாலை நேரம்.முனிவர் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன? அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன?என பார்த்துவிட்டு வா" என்றார்.சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்."நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்... 100 மாடுகளும் படுக்கணும்... அதுதான் முக்கியம். சரியா? இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்."சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு... கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்."ஏன்?என்ன ஆச்சு?" என்றார் முனிவர்."100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை...சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன...சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்...ஆனால் அனைத்து மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்கவைக்க முடியவில்லை.சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி!அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்.முனிவர் சிரித்தபடியே...*"இதுதான் வாழ்க்கை.! வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!*சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்... சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்...*ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...**அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...*பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே..*தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலச்சக்ரத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்.*முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் என்னனால் தீர்க்க முடிந்த "சில பிரச்சினைகளை தீர்த்து விட்டேன்,தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன்.*இப்போதும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கிறது என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.*கதை சொல்லும் நீதி!*வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...**அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.**ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது.**அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.**
Powered by Blogger.

Ad

Ad Code

Google Ad