Ads

ads header

Ad Code

Google adsense

Tuesday, December 24, 2019

கண்சிமிட்டும் விண்மீன்கள்

விண்மீன்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
* * * * * * * *
உங்கள் நட்சத்திரம் எது ? என்றால் உடனே பதில் வரும். ஆனால் அது வானில் எங்கே இருக்கிறது? அதைப் பார்த்ததுண்டா?
தெரியாது என்றே பதில் வரும்.
பிறந்த உடனேயே இராசி நட்சத்திரம் பார்க்கும் நாம், நாள் தோறும் வானத்தைப் பார்த்தும் எந்த ஒரு விண்மீனின் பெயரையும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுக் கல்லூரியில் வானியல் பாடம் பயிற்றும் பேராசிரியர் பலரும் வானில் உள்ள நட்சத்திரத்தைக் சுட்டிக் கேட்டால் தெரியாது என்கின்றனர்.
" பன்னிரண்டு ஆண்டுகள் கணிதம் பயிலுவர் வானில் ஒரு நட்சத்திரம் அறிகிலர்"--
என்று பாரதி வருத்தப்பட்டார். இன்றும் அதே நிலைதான்..
நம் தாத்தாக்கள் நட்சத்திரங்களின் இருப்பிடத்தை அறிந்திருந்தார்கள் அவற்றின் மூலம் இரவு நேரத்தில் காலத்தைக் கணித்தார்கள் . பருவகாலத்தை அறிந்து இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். அவர்களிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்.
மேலை நாடுகளில் வானில் தெரியும் விண்மீன்களை அறிந்து கொள்ள ஆயிரக்கணக்கில் நூல்கள் உள்ளன.
அழகான தெரிவான விளக்கப் படங்களுடன் வயதுக்கேற்ப பல்வேறு வகையான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்தே நாம் நட்சத்திரக் கூட்டங்களை இனம் கண்டு கொள்ளலாம். Star atlas,star map Star finder என பல்வேறு நூல்கள் உள்ளன. குழந்தைகள் வேடிக்கையாக அவற்றை எளிதில் கற்றுக்கொள்கின்றன. நட்சத்திரங்களைப் பற்றிய கதைகளும் அழகான படத்துடன் விளக்கப்படுகின்றன.
நாம் நம் குழந்தைகளுக்கு இராசி நட்சத்திரம் பார்க்கின்றோம் ஆனால் அவை வானில் எங்கே உள்ளன என்பதையும் அவற்றில் உள்ள அறிவியலையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.
இராசி பலன் பார்க்கும் நாம் நம் குழந்தைகளுக்கு விண்மீன்ளைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டாவா?
இலக்கியங்கள் ,சோதிடநூல்கள் தனிப்பாடல்கள் கோயில் சிற்பங்கள் சோதிடவாய்பாடுகள் முதலானவை நட்சத்திரங்களின் வடிவங்கள் பற்றிக்குறிப்பிடுகின்றன அவற்றின் மூலம் விண்மீன்களை இனம்கண்டறிய முடியாது தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டினால்தான்.
மேலை நாட்டார் வெளியிட்டுள்ள வரைபடங்களை நாம் கையில் வைத்துக்கொண்டு நட்சத்திரக்கூட்டங்களைக் கண்டுமகிழலாம் (இராசி) .
தமிழர் சோதிடக்கலை இரண்டு கூறுகளைக்கொண்டது
1. வானியல் 2.ஆருடம்.
வானியல் அறிவியலை அடிப்படையாகக்கொண்டது.
ஆருடம் கருதல் அளவை கொண்டது. பலன் கூறுவது.
வானியலை ஏற்கிறேன்.
ஆருடத்தை நான் ஏற்பதில்லை.
நட்சத்திரங்களை அறிந்து கொள்ள தமிழில்
சிறு நூல்கள் சிலவே உள்ளன.
"விண்மீன்களைக் கண்டு ரசியுங்கள்" "கண்சிமிட்டும் விண்மீன்கள்" "சின்ன சின்ன விண்மீன்கள்" போன்ற சில நூல்கள் உள்ளன. இவை ஓரளவு பயன்படும்.

No comments:

Post a Comment

Powered by Blogger.

Ad

Ad Code

Google Ad