சனாதன தர்மம் 2

*“இதுவே சனாதன தர்மம்….”*

ஈமச் சடங்குகள் எல்லாம் பொருள் செரிந்தவையாகும்.

இறந்த தந்தைக்கு முன் மகன் தோளில் நீர் சுமந்த குடத்தை வைத்துக்கொள்வான்.

நாவிதனார் தண்ணீர் குடத்துடன் மூன்று முறை சுற்ற செய்து மூன்று ஓட்டை இட்டு, 'அப்படியே உடைத்து திரும்பி பார்க்காமல் போ' என்பார்.

தண்ணீர் குடம் என்பது சாரீரம்.

அதி நிறைந்த தண்ணீர் ஜீவான்மா.

முதலில் இட்ட ஓட்டை தனெஷனை (பணத்தாசை),
இரண்டவது இட்ட ஓட்டை தாரெஷனை (மனைவி மேல் வைத்த ஆசை) ,
மூன்றாவது இட்ட ஓட்டை மக்கள் மேல் வைத்த ஆசை.

இந்த மூன்று ஆசைகளாகிய ஓட்டைகளின் வழி சரிரதிலிருந்த ஆத்ம சைதன்யமாகிய உயிர் சிந்திவிட்டது.

இந்த ஆசாபாசத்தை திரும்பி பாராமல் நீ அறநெறியில் செல்வாயாக என்ற குறிப்பை நவிதனார் காட்டுகிறார்.

நம் முன்னோர்கள் செய்த சடங்குகள் அர்த்தமற்றவை என்று தல்லாமல் நுனித்து உணர்வது மதிடமை ஆகும்.

இந்த ஆன்மாக்களுக்கு செய்யும் வழிபாடுகள் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிகடனாகும்..

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
கைம்புலத்தார் ரோம்பல் தலை"

- திருக்குறள், (அறத்துப்பால்-43)

- சமைய தத்துவங்கள் ஐநூறு நூலிலிருந்து..

*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*

*ஆன்மீக வாழ்க்கைக்கு  சமய விழிப்புணர்வு அவசியம் *.

சனாதன தர்மம் 1

*உடலெனும் பிரபஞ்சம்...*

ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம்...

இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள்.

இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

"நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்
நேரான தேயுவோடு வாயுமாகும்
அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்
அரிதான பிருதிவியு மண்ணு மாகும்
தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு
தாக்கான வாயுவது காற்றுமாகும்
இகழ்ந்தவா காயமது சத்தமாகும்
ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே"

-யூகி வைத்திய சிந்தாமணி..

மண்ணின் கூறுகள்..

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நீரின் கூறு (புனலின் கூறு)..

நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பின் கூறு...

உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.
நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்...

வளியின் (காற்று) கூறு..

ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.
வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணின் (ஆகாயம்) கூறு

இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)
விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.

மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.

இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது.

சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)
திருவாணைக்கால் நீர்
திருவண்ணாமலை நெருப்பு
காளஹஸ்தி காற்று
சிதம்பரம் ஆகாயம்.

*பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச்செய்துள்ளனர்...*

*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*

*ஆன்மீக வாழ்க்கைக்கு  சமய விழிப்புணர்வு அவசியம். *

இரண்டு

*மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள்..*

வருவதும் போவதும் இரண்டு - இன்பமும், துன்பமும்.

வந்தால் போகாதது இரண்டு - புகழும், பழியும்.

போனால் வராதது இரண்டு - மானமும், உயிரும்.

தானாக வருவது இரண்டு - இளமையும், முதுமையும்.

உடன் வருவது இரண்டு - புண்ணியமும், பாவமும்.

அடக்க முடியாதது இரண்டு - ஆசையும், துக்கமும்.

தவிர்க்க முடியாதது இரண்டு - பசியும், தாகமும்.

பிரிக்க முடியாதது இரண்டு - பந்தமும், பாசமும்.

இழிவைத் தருவது இரண்டு - பொறாமையும், கோபமும்.

அனைவருக்கும் சமமாவது இரண்டு - பிறப்பும், இறப்பும்.

இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.

ஆசாரம் பார்த்தால்....

*ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான்*..!

ஆசாரம் ... ஆகாரமும் எப்போதும் வேண்டுமா*?

*உத்தங்க மகரிஷி*
அந்த வனாந்திரமான பிரதேசத்தில் கால் கடுக்க நடந்து கொண்டிருந்தார்.

தாகம் அவரை வாட்டி வதைத்தது.

""என்ன தாகம் இது!
உயிரே போய்விடும்போல் அல்லவா இருக்கிறது?

கண்ணன் அவரைச்
சோதிக்கிறானா?

ஆம். உண்மையிலேயே அதுதானே நடக்கிறது! முனிவர் அல்லவா அவர்

எப்போதாவது யாரேனும் முனிவர்கள்  அடியவர்கள் உபசரித்தால் கனிகள பசும்பால் மட்டும் சாப்பிடுவதுண்டு மற்றபடி காற்றும் நீருமே ஆகாரம்

இன்றென்ன இப்படி ஒரு தாகம்! அங்கே ஒரு பொய்கை்கூடத் தென்படவில்லை.

உத்தங்கர் தாகத்தின் கொடுமை பொறுக்காமல் காலோய்ந்து உட்கார்ந்து விட்டார்

""கண்ணா! என் உணர்வுகளை எல்லாம் வென்று விட்டதாக மமதை கொண்டேன்.

இந்தப் பாழும் தாக உணர்வை வெல்ல முடியவில்லையப்பா! பிராணனே போய்விடும் போல் இருக்கிறதே?

கிருஷ்ணா  எங்கிருந்தாவது எனக்கு ஒரு குவளை நீர் கிடைக்க நீ அருளக்கூடாதா?

வாய்விட்டுக் கதறியும் கூட அந்தக் கதறல் ஏன் அவன் செவியை எட்டவில்லை?

அஸ்தினாபுரத்தில் பாஞ்சாலியின் கதறல் கேட்டு துவாரகையிலிருந்து சேலை வழங்கியவன், இன்று தன் கதறலைக் கேட்டு ஒரு குவளை தண்ணீர் தருவதில் என்ன சிரமம்?

கண்ணனின் கருணைக் கடல் வற்றிவிட்டதா?

பாஞ்சாலியைப் பற்றி நினைத்ததும் உத்தங்கருக்கு பாரதப் போரின் போது கண்ணன் அவருக்கு வழங்கிய ஒரு வாக்குறுதி ஞாபகத்தில் வந்தது.

"அதன்படி இப்போது கண்ணன் அவருக்குத் தண்ணீர் தந்ததாக வேண்டுமே?

பரம்பொருள் வாக்குதவறுமாஎன்ன?'

உத்தங்கர் திகைத்தார்.

அவர் மனத்தில் பழைய நினைவுகள் படம் படமாய் விரிந்தன

பாரதப் போர் முடிந்து கண்ணன்  துவாரகை திரும்பும் வழியில் உத்தங்க மகரிஷி கண்ணனைக்
கண்டார்.

பாரதப் போர் நிலவரம் எதுவும் உத்தங்கருக்குத் தெரியாது.

தவத்திலேயே ஆழ்ந்திருந்த அந்த மகரிஷி கண்ணனை வணங்கிவெகுபிரியமாய் விசாரித்தார்.

""கண்ணா! பாண்டவர்களுக்கும்கவுரவர்களுக்கும் இடையேநட்புறவை ஏற்படுத்தினாய்அல்லவா?"

எல்லோரும் நலம் தானே?

பீஷ்மர் எப்படி இருக்கிறார்?''

கண்ணன் பணிவோடு நடந்த அனைத்தையும் சொன்னான்.

பீஷ்மர் இறந்துவிட்டார்

கவுரவர்கள் கொல்லப்பட்டார்கள் வள்ளல் கர்ணனும் கூட மாண்டு போனான்

இப்போது தர்மபுத்திரரின் அரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திகளை முதன் முறையாக கேட்ட உத்தங்கரின் கோபம் எல்லை மீறியது.

கண்ணன் கடவுள் என்ற எண்ணத்தைக் கூட அந்தக் கோபம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

"என்ன சொல்கிறாய் கண்ணா?"

நீ நினைத்தால் அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா?

ஏராளமான பேர் கொல்லப்படுவதில் என்ன ஆனந்தம் உனக்கு? நீ நினைத்தது தானே நடக்கும்?

அவ்விதமெனில் நீ ஏன் அனைவரையும் காப்பாற்ற
வேண்டும் என்று நினைக்கவில்லை?

இதோ உன்னைச் சபிக்கப்போகிறேன்!''

உத்தங்கர் கமண்டலத்திலிருந்து கண்ணனுக்குச் சாபம் தருவதற்காக ஒரு பிடி தண்ணீரை கையில்
எடுத்து விட்டார்.

கண்ணன் அந்தத் தண்ணீரைச் சடாரென்று தட்டிவிட்டான்

தனக்குச் சாபமளிப்பதன் மூலம்அவரது தவவலிமை குறைந்து போவதைத் தான் விரும்பவில்லை
என்றும்

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதே தன் அவதார நோக்கமென்றும் அதைக் கருத்தில் கொண்டே செயல்பட்டதாகவும் விளக்கினான்.

மனித அவதாரத்தில் மனித சக்திக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும், அதை மீறித் தான்
செயல்பட்டும் கூட துரியோதனனை மாற்ற இயலவில்லை என்றும் கண்ணன் கூறியதைக் கேட்டு உத்தங்கர் மனம் நெகிழ்ந்தார்

உத்தங்கரைப் பாசம் பொங்கப் பார்த்த கண்ணன்

அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் கீதை சொன்ன போது தான் காட்டிய விஸ்வரூப தரிசனத்தை உத்தங்கருக்கும் காட்டினான்

அவர் பிரமிப்போடு விஸ்வருபத்தை தரிசித்தார்.

மீண்டும் பழைய வடிவம் பெற்ற கண்ணன்

உத்தங்கரிடம் கனிவோடு சொன்னான்.

""ஏதேனும் ஒரு வரம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் உத்தங்கரே!''

""கண்ணா! உன் விஸ்வரூப தரிசனத்தையே பார்த்துவிட்ட பிறகு இனி வேறென்ன வேண்டும் எனக்கு?

உன்னைச் சபிக்க எடுத்த என் கை நீரைத் தட்டிவிட்டாயே! அதனால் அல்லவோ என் தவம் பிழைத்தது!

என் கை நீரைத் தட்டி விட்ட நீ  எப்போது எங்கே எனக்கு நீர் தேவைப்பட்டாலும் அது கிடைக்க
அருள்வாயாக

இந்த வரமும் கூட எனக்குத் தேவையில்லை தான்
வரம் கேள் என்று பரம்பொருளே சொன்ன பிறகு அதன் கட்டளையைப் பணிவதே சரி என்பதால் இதைக் கேட்டேன்!''

கண்ணன் கலகலவென்று நகைத்தான்.

"அப்படியே ஆகுக!' என்று சொல்லி வாழ்த்திவிட்டு சென்றுவிட்டான்.

வனப் பிரதேசத்தில் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த உத்தங்கர் இப்போது திகைத்தார்.

"அன்று கண்ணன் தந்த வரம் பொய்ப்பிக்குமா? ஏன் இன்னும் தண்ணீர் கிட்டவில்லை?'

அப்போது தொலை தூரத்தில் ஒரு புலையன் வருவது தென்பட்டது

கையில் ஒரு குவளை நீரோடும் சுற்றிலும் நாய்களோடும் வந்து கொண்டிருந்தான்.

""சாமி எங்க இங்க வந்து மாட்டிக்கிட்டீங்க? தண்ணீர் இல்லாத காடாச்சே இது? தாகம்
வாட்டுதா? தண்ணீர் தரட்டுமா?
வாங்கிக் குடிக்கிறீங்களா?''

கடும் தாகத்திலும் உத்தங்கரின் ஆசாரம் அவரைத் தடுத்தது.

போயும் போயும் புலையன் கையால் நீர் வாங்கி அருந்தவா?

""சீச்சி! தள்ளிப் போ!'' .. அவனை விரட்டினார்

"சாமீ, தள்ளிப் போன்னு சொன்னீங்களே?

எதைத் தள்ளிப் போகச் சொல்றீங்க? என் உடலையா? ஆன்மாவையா?

உடலுக்கே சாதி கிடையாது என்கிறபோது, ஆன்மாவுக்கு ஆண், பெண் பால் வேற்றுமை கூடக் கிடையாதே சாமி?

எல்லா உடலும் சாகப் போகிறது தானே?

சாகாத உடல் இருந்தாச் சொல்லுங்க.

அதை உசந்த சாதி உடல்னு நான் ஒப்புக்கிறேன்!''

உத்தங்கர் திகைத்தார்.

" ஒரு புலையன் என்ன அழகாக வேதாந்தம் பேசுகிறான்! யார் இவன்?

""யாரப்பா நீ?'' திகைப்போடு கேட்டார்

பதில் சொல்ல அவன் அங்கே இல்லை

அவனும் உடன் வந்த நாய்களும் சடாரெனக் காட்சியை விட்டு மறைந்துவிட்டன

""கண்ணா! என் தெய்வமே! என்ன சோதனை இது? வந்தது யாரப்பா?'' உத்தங்கர் கதறினார்

அவரின் செவிகளில் இனிய புல்லாங்குழல் நாதம் கேட்டது.

திரும்பிப் பார்த்தார்

கண்ணன் குறும்பு தவறும் புன்முறுவலோடு நின்று கொண்டிருந்தான்

""உத்தங்கரே! உமக்கு நீர் தருவதாகத்தான் வாக்குறுதி தந்தேனே தவிர யார் தருவார்
என்று உத்தரவாதம் தரவில்லையே

நாய்களோடு கீழ்ச்சாதி என நீர் எண்ணும் புலையன் வடிவில் வந்தவன் யார் தெரியுமா?

தேவேந்திரன் அவனிடம் உத்தங்கர் என் பக்தர் தாகத்தால் வாடுகிறார் அவருக்கு நீரையல்ல
அமிர்தத்தையே கொண்டு கொடு என்றேன்

அவன் மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பதை விரும்பவில்லை.

புலைய வடிவில் செல்கிறேன் அவர் ஏற்றால் வழங்குகிறேன் என்றான்

அவன் எதிர்பார்த்த படியே நீர் அவன் உருவைக் கண்டு வெறுப்படைந்தீர்.

அமிர்தத்தை இழந்துவிட்டீர்!''

உத்தங்கரின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.

""உத்தங்கரே! கீழச்சாதியினர் என்று உங்களைப் போன்றோர் கருதும் மனிதர்களால் தானே உலகம் நடக்கிறது?

உழவுத் தொழில் செய்வோர் மண்பாண்டம் செய்வோர் ஏன் கழிவை அகற்றுவோர்
இவர்களெல்லாம் தொழிலை நிறுத்திவிட்டால் உலகம் என்ன ஆகும்

வர்ணாஸ்ரமம் என்பது தொழில் சார்ந்த பிரிவே தவிர பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை
என்பதை ஏன் நீங்கள் உணரவில்லை

கீழ்ச்சாதியினர் என்று உங்களைப் போன்றோர் ஒதுக்கும் மனிதர்கள் செய்யும் தொழில் தானே
அமிர்தம்

அந்த அமிர்தத்தால் தானே உலகம் அழியாமல் நிலையாய் நிற்கிறது

அவர்கள் இல்லாவிட்டால் என்றோ உலகம்அழிந்திருக்குமே ஒரு பிரிவினரை ஒதுக்கினால் அவர்கள் மூலம் கிடைக்கும் அமிர்தத்தையே அல்லவா உலகம் இழக்க நேரிடும்?

உத்தங்கர் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

பக்திப் பரவசம் நிறைந்தவராய்,

" *கண்ணா*! நீ அர்ச்சுனனுக்குச் சொன்னது அர்ச்சுன கீதை

எனக்குச் சொன்னது உத்தங்க கீதை

இந்த கீதையின் உண்மையை உலகம் உணரட்டும்

பிரபோ! என் மனதில் தெளிவு பிறக்க உன் ஆசி தேவையப்பா!' என்றார்.

கண்ணனின் கரம் அவருக்கு ஆசி வழங்கியது. பின் அவனது உருவம் அவர் நெஞ்சுக்குள் புகுந்து
மறைந்தது.

*ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான்*.

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...