பஞ்ச முக கணபதி



Image result for பஞ்சமுக கணபதி
கஷ்டங்களை நீக்கும் பஞ்சமுகவிநாயகர்

விநாயகர் வழிபாட்டிற்கு எளிய தெய்வமாக ஒவ்வொரு தெருமுனைகளிலும் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி வேண்டும் வரம் தந்து அருள்புரிகிறார். அதுபோல ஒவ்வொருவரும் தமக்கு உகந்தவாறு விநாயகருக்கு பல பெயர்களை வைத்து அழைத்து கொள்கின்றனர். எங்கு வைத்து என்னை வணங்கினாலும், எந்த பெயரில் அழைத்தாலும் நான் அனைவருக்கும் வினை தீர்க்கும் விநாயகனாய் இருப்பேன் என்றே அவர் எண்ணம்.
நாம் வணங்கும் விநாயகர்கள் பெரும்பாலும் ஒற்றை தலையுடன் தான் பார்த்து இருப்போம். ஆனால் சில ஆலயங்களில் ஐந்து முகத்துடன் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். ஒரு முகத்துடன் உள்ளபோதே எல்லா வினைகளையும் களைபவர் ஐந்து முகத்துடன் இருக்கும்போது பல மடங்கு அருள்மழை பொழிவார். ஹேரம்ப கணபதி என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஐந்து முகங்களை கொண்ட விநாயகர் திருவுருவம் நமது நாட்டை விட அண்டை நாடான நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தாந்திரிய வழிபாட்டுக்கு ஏற்ற திருவுருவமாக ஹேரம்ப கணபதி விளங்குகிறார்.
ஹேரம்ப என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அர்த்தம் “உதவியற்றவர்களை பாதுகாப்பவர்” என்று பொருள். முத்தல புராணம், பிரம்ம வை வர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் மற்றும் கணேச புராணத்தில் ஹேரம்ப கணபதி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. பசுமை கலந்த கருமை நிறத்துடன் ஐந்து முகத்துடன் காணப்படுவார். அபயம், விரதம், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் என பத்து கரங்களில் தாங்கி சிம்ம வாகனத்தில் அமர்ந்து இருப்பதே இவர் திருவுருவம். ஆயினும் இவ்வுருவ அமைப்பு ஆலயங்கள் தோறும் சற்று மாறுபடும்!!!
பொருளாதார நிலையில் ஏற்படும் மந்தநிலை, கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் ஏற்படும் துயரம் போன்ற கஷ்டங்களை நீக்க பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.மேலும் ஏகாதசி திதியில் விவசாயம், வேளாண்மை, காவல்துறை, விஞ்ஞானம், பொறியியல், வரி துறைகளில் வேலைபுரிவோர் வணங்கிட சகல நன்மையும் பெறுவர். ஹேரம்ப விநாயகர் எனும் பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம். ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார். நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில் பஞ்சமுக விநாயகரை வழிபடலாம். மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு செய்யலாம். நான்கு திசையில் தலையும், அதற்கு மேல் ஒரு தலையுமாக காட்சி தருகிறார். விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன் பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் அருள்புரிகிறார். திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின் பின்புறத்தின் ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் அருள்புரிகிறார். கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில் 10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது!!!
மகா கணபதி, சித்தி கணபதி, வித்யா கணபதி, சக்தி கணபதி, மோட்ச கணபதி
ஆகிய ஐந்து கணபதிகளும் ஒன்றாக சேர்ந்ததே பஞ்சமுக விநாயகர்.
அதாவது பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே பஞ்சமுக விநாயகர்!!!

சோம்பல்

‘’ சோம்பல்…(Laziness).’’
...........................................

சோம்பல் என்றால் என்ன? எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல்(Laziness).

சோம்பல்தான் வெற்றியடையத் துடிக்கும் உங்களுக்கு கடுமையான எதிரி இந்த. சோம்பல்தான்..
ஒருதரம் மனதிற்குள் நுழைந்துவிட்டால் பின்பு காலமெல்லாம் அதனுடைய சாம்ராஜ்யம்தான்.

காலந் தாழ்த்தாமை, மறதி இல்லாமை, சோம்பல் இன்மை, அதிக நேரம் உறங்கா இருத்தல் இந்த நான்கு பண்புகளைப் பழகிக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.

இந்த நான்கு குணங்களில் சோம்பல் இல்லாமல் இருப்பதுதான் மிகக் கடினம்.

சோம்பல் தோன்றும்போதே அதை வெறுத்து ஒதுக்கிச் செயல்படத் தொடங்க வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற விரும்பும் எல்லோருமே சோம்பல் இல்லாமல் இருப்பதோடு செய்ய வேண்டிய செயல்களை அந்தந்தக் காலங்களில் செய்து விட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

யார் அதிகச் சோம்பேறி என்று கண்டறிய ஒரு போட்டி வைத்தார்கள்.

அதில் முதல் பரிசு பெற்றான் ஒருவன். பரிசை வந்து பெற்றுக் கொள்ளுமாறு, பத்தடி தள்ளி அமர்ந்திருந்த அவனிடம் சொன்னார்கள்.

அவ்வளவு தூரம் யார் நடப்பதாம்? இங்கே வந்து என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்,’ என்று சொல்லி எனக் கொட்டாவி விட்டானாம் அவன்!

ஆம்.,நண்பர்களே..,

‘’ சோர்வு’’ என்பதிலுள்ள முதல் எழுத்தை நீக்கினாலே நமக்கு பிறந்துவிடும் ‘’தீர்வு’’

சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழுப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ.!!.

எனவே சோம்பலை விரட்டி வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டுவோம்..................

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...