விம்சோத்தரி திசா

திசைகள் மொத்தம் 120 ஆண்டுகள் 

விம்சோத்தரி தசை ஆண்டுகள் 120 ம் கோள்களுக்கு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டன?

சாமுத்ரிகா அங்க லட்சணம்என்ற நூலின் துணைக் கொண்டு கண்ணன் சுவாமி கோவிந்தன் அடிமை விளக்கம்

மேற்படி நூலின் படி ஒரு மனிதனின் உடல் அங்க அளவுகள் அவனது விரல் அங்குலாஸ்தி அளவுகளைக் கொண்டு அளக்கப்படுகிறது.

இவ்வாறு அளக்கப்படும் உடல் அங்கங்களின் அளவுகளை நான்கு மடங்கு ஆக்கினால் சம்பந்தப்பட்ட மனிதனின் சரியான உயரம்
கிடைத்து விடும் .

அந்த அளவீடுகளைக் கொண்டே விம்சோத்தரி திசையில் கோள்களுக்கு ஒதுக்கப்பட்ட திசை ஆண்டுகளை கானலாம்

அந்த நூலில் கூறியுள்ளவாறு:

தலைப் பகுதி                                         -சூரியன்      -1.5 அங்குலம்
கண் முதல் மூக்கு வரை                        -சந்திரன்      -2.5. அங்குலம்
கழுத்து இணைப்பு                                -செவ்வாய்   -1.75 அங்குலம்
அசையும் பகுதிகள் புஜங்கள்              -புதன்           -4.25 அங்குலம்
கீழ்ப்பகுதி தொடை வரை                      -குரு             -4.00 அங்குலம்
மர்ம உறுப்புக்கள் பகுதி                         -சுக்கிரன்      -5.00 அங்குலம்
பாதங்கள்                                                 -சனி             -4.75அங்குலம்
உடம்பில் துளை உள்ள பகுதிகள்-          -ராகு             -4.5.  அங்குலம்
துளை அங்கங்களுக்கு எதிர் பகுதி-       -கேது           -1.75 அங்குலம்

மேற்படி அங்க அளவுகளை நான்கு தத்துவங்களால் பெருக்க விம்சோத்தரி திசை ஆண்டுகள் கிடைக்கும். அதாவது
புதன்-          4.25×4=17 ஆண்டுகள்
கேது-           1.75×4= 7 ஆண்டுகள்
சுக்கிரன்-      5.0 ×4=20 ஆண்டுகள்
சூரியன்-       1.5×4=  6 ஆண்டுகள் 
சந்திரன்-       2.5×4= 10 ஆண்டுகள்
செவ்வாய்-   1.75×4= 7 ஆண்டுகள்
ராகு-              4.5. ×4=18 ஆண்டுகள்        
குரு-               4.0×4=16 ஆண்டுகள்
சனி-               4.75×4=19 ஆண்டுகள்
                    
                                    120 ஆண்டுகள்.
                    
இவ்வாறு விம்சோத்தரி திசையில் கோள்களுக்கான திசை வருடங்கள் பிரிக்கப் பட்டுள்ளன.

விம்சோத்தரி திசை வருடங்களுக்கான வரிசை முறை.

ராகு கேது அச்சுக்கள் கோள்களை இரண்டு பிரிவாக உள்ளது

ராகு-18, செவ்வாய்-7, குரு-16, சனி-19 என 60ஆண்டுகள் ஒரு பிரிவாகவும் 

கேது-7, சந்திரன்-10, சுக்கிரன்-20, புதன்-17,சூரியன்-6 ஆண்டுகளாக 60 ஆண்டுகள் மற்றொரு பிரிவாகவும் விம்சோத்தரி திசை ராகு கேது அச்சுக்களுக்கு இடையே செயல்படுகிறது.

வேகமான செயலில் இருந்து மெதுவான செயலுக்கு ஆத்மன் செல்வதைப்போல. வேகமாக செல்லும் கோள் புதனிலிருந்து மெதுவாக செல்லும் கோள் சனி கோளுக்கு விம்சோத்தரி திசை செலுத்தப் படுகிறது.

இதன்படி புதன்-கேது-சுக்கிரன்-சூரியன்-சந்திரன்- செவ்வாய்-ராகு-குரு-சனி என்ற வரிசை முறையில் விம்சோத்தரி திசை இயங்குகிறது.

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய படி மனிதன் என்பவன் குழந்தையிலிருந்த்(புதன்) உடல்ரீதியாக வளர்ச்சி பெற்று வளர்ந்து முதிய மனிதன்(சனி) ஆகிறான்என்பதே திசாபுத்திகள் 
வந்தது

No comments:

Post a Comment

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...