நெருக்கடிகள்

நெருக்கடி என்கிற சூழலை யாரும் விரும்புவது இல்லை. ஏனெனில், நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் நல்லது, வசதியானது என்ற மனப்போக்கு நம்மில் பல பேருக்கு உள்ளதைப் பார்க்கின்றோம்.

ஆனால் ஒருவருக்கு நெருக்கடி வருவது ஒரு நல்லது தான். கசப்பான மருந்து இல்லாமல் நோய் குணமாகாது,,

ஜப்பானியர்களுக்கு உயிர் உள்ள’ மீன் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஜப்பானியக் கடல் பகுதியில் மீன்கள் அவ்வளவாக இல்லை. 

படகுகள் கடலுக்குள் வெகுதூரம் சென்று தான் மீன் பிடித்துக் கொண்டு திரும்ப வேண்டி இருந்தது.

நீண்ட தூரம் சென்று மீன் பிடித்து வருவதால் எப்படி உயிர் உள்ள’ மீன் இருக்கும்.? ஜப்பானியர்களுக்கு அந்தச் சுவை பிடிக்கவில்லை.
யோசித்தார்கள்

மீன் பிடித்து அதனை ஐஸ் பெட்டியில் போட்டுப் பதப்படுத்தி கரைக்குக் கொண்டு வந்தார்கள்.

இந்தச் சுவையும் ஜப்பானியர்களுக்கு விருப்பமானதாக இல்லை. எப்படியாவது உயிருடன் கரைக்கு மீனைக் கொண்டு வர வேண்டும் என்ன செய்வது? என்று மீண்டும் யோசித்தார்கள்..

மீன் பிடிக் கப்பலுக்குள் ஒரு பெரிய தொட்டி அமைத்து, பிடித்த மீனை அதனுள் விட்டார்கள். உயிரோடு கரைக்குக் கொண்டு வந்தார்கள். சமைத்தார்கள். 

பிரச்சனை தீர்ந்ததா? ம்ஹும். தீரவில்லை. இப்போதும் மீன் ருசியாக இல்லை.

எங்கேயோ நடுக்கடலில் பிடித்த மீன் உயிரோடு தானே கரைக்கு வருகிறது. இதற்கு மேல் என்ன செய்வது என்று யோசித்தார்கள். 

பிரச்சனை என்னவென்றால், மீன் தொட்டியும், கடலும் ஒன்றில்லை. அந்த வித்தியாசம் மீன்களுக்குப் புரிந்ததும், அவை அலுத்துப் போய் சும்மா இருந்து விட்டன. 

சோர்ந்து போன மீன்களின் சுவை ஜப்பானியர்களுக்குப்
 பிடிக்கவில்லை.

எப்படியாவது தொட்டிகளில் உள்ள மீன்களைச் சுறுசுறுப்பாக்க வேண்டும். என்ன செய்யலாம்? 

நடுக்கடலில் மீன்கள் நடமாடும் தொட்டிக்குள் ஒரு சிறிய சுறாவை விட்டார்கள். 

சுறா, மீன்களைத் துரத்தி வேட்டை ஆட முயன்றது. மீன்கள் முன்பை விட அதிக சுறுசுறுப்புடன் தொட்டியைச் சுற்றி வந்தன. 

சில மீன்கள் சுறாவிடம் அகப்பட்டு உயிர் இழந்தன. ஆனால் பெரும்பான்மையான மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தன..

அதன் ருசி ஜப்பானியர்களுக்கு முழு திருப்தியைத் தந்தது.ஆக, தொட்டியில் சும்மா சுற்றி வருகிற மீன்கள் இலக்கு இல்லாமல், நெருக்கடி எதுவும் இல்லாமல், சமாளிப்பதற்கு சவால் ஏதும் இல்லாமல் போரடித்துப் போய் சோர்ந்து விட்டன. 

அந்த மீன்கள் மீண்டும் சுறுசுறுப்பாவதற்கு சுறாக்குட்டி என்கிற நெருக்கடி தேவைப்பட்டது..

ஆம்.,நண்பர்களே..

நெருக்கடியை சாதிக்கப் பிறந்தவர்கள் சந்திக்கவும் சோர்ந்தும் போவதில்லை. 

நெருக்கடி இல்லை என்றால், வாழ்க்கையே சுவையற்றுப் போய் விடும். 

நெருக்கடிகள் நம்மை முடுக்கும் போது, நமக்கு முன்னர் சாதித்தவர்கள் வாழ்வில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். 

மேலும் ஒவ்வொரு நாளையும் புதிய துவக்கமாகவும், வாழ்வில் புதிய திருப்பமாகவும் பார்த்தால் வெற்றி நிச்சயம்.  

சராசரி மனிதர்களும் இப்படித் தான் எந்தவித நெருக்கடி இல்லாத வாழ்க்கை தான் விரும்புகிறார்கள். 

ஆனால் உண்மையில், நெருக்கடிகள் தான் நம்மை மேலும் வலுவாக்குகிறது.
போராடத் தூண்டுகின்றன 

நம்மிடம் இல்லாத திறமைகளைக் கூட வெளிக் கொண்டு வருகின்றன........

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...