குரு

குருமார்கள் எட்டு வகை.

சீடனின் உண்மைகளைக்
கவர்ந்து, ஏமாற்றுபவன் நிஷித குரு. நீக்கப்பட வேண்டியவன்.
எட்டு வகையான கர்மங்களால் இவ்வுலக வாழ்விலும், மேலுலக வாழ்விலும் சுகமான வாழ்க்கை வாழ வழிகாட்டுபவன் காமியகுரு.
இவரும் நீக்கப்பட வேண்டியவரே.
வேதங்களைப் போதிப்பவர் போதக குரு.
வேத தத்துவங்களை வேறுபடுத்தி
விளக்குபவர் வேதக குரு.
தேகங்களை சூசகமாகச் சுட்டி ஆத்மாவை விளக்குபவர் சூசக குரு.
நாம் பிறந்ததற்காண காரணத்தை விளக்கி கடைத் தேற்றுபவர் காரண குரு.
மகாவாக்கியப் பொருளால் இறைவனைக் காட்டுபவர் வாசக குரு.
சீடனுக்கு ஏற்படும் சந்தேகங்களை,
தக்கக் காரணம் காட்டி விளக்குபவர்
விகித குரு.
இந்த ஆறு திறமைகளை ஒருங்கே பெற்ற குருவாக அமையலாம்.
அல்லது யார் யாரிடம் எந்தத் திறமைகள் உளவோ அவர்களை குருமார்களாக ஏற்கலாம்.

பற்றின்றி கடமையாற்ற
மனம் தூய்மை அடையும். தூய்மையான மனதிலே உண்மையான பக்தி உண்டாகும்.
பக்தி வளர்ச்சியடைய அருள் உள்ளமாக மாற்றம் அடையும்.
அருள் உள்ளம் உண்டாக, ஆண்டவன் உங்கள் உள்ளத்தில்
இருந்து வெளிப்பட்டு உங்களை
ஆட்கொள்வான்.
இவற்றையே நம் அறநூல்கள் கருமம்,பக்தி,ஞானம் என்று கூறுகிறது.

காலங் காலமாக உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும்
ஆலயத்திற்குச் சென்று
ஆண்டவனை வழிப்பட்டு வருகிறார்கள். உங்கள் மரபில்
அவ்வாறு வழிபட்டோரில் எவரேனும் ஒருவர் சமாதி நிலையை அடைந்துள்ளார்களா?
ஆரம்ப நிலையில் ஆலய வழிபாடு
வேண்டும்.பிறகு ஆழ்நிலைத் தியானம் வேண்டும். தியானத்தில்
மனம் அடங்கி ஞானம் வரப்பெற்றாலே முக்தி கிடைக்கும்.
மனம் படிப்படியாக பக்குவப்பட்டு
உண்மையான பக்தி உண்டாகி, அருள் உள்ளமாகி, தியானத்திற்கு வழிகாட்டி, தியான முதிர்ச்சியில் ஞானம் பெற வேண்டும் என்பதற்காக அமைக்கப் பட்டவைகளே ஆலயங்கள்.
                                                               பக்தி வழியில் செல்வோர் தம் மனதில்
பதிந்துள்ள, மனதில் எண்ணினாலே பரவச நிலைக்கு இழுக்கும் ஒரே கடவுளைச் சிந்திக்க
வேண்டும்.வழிபட வேண்டும்.
அருவுருவ வழியில் செல்வோர் பக்தி வழியில் தான் வழிபட்டு வந்த
கடவுளின் தோற்றத்தைக் கண்கள் மூடி ஒருமைப்பட்ட மனத்தோடு தியானம் செய்துவர வேண்டும்.
தோற்றும் பொருளெல்லாம் இறைவன் படைப்பே என்று உள்ளத்தில் சிந்திப்போர், இறைவன் உருவம் அற்றவன்.
அன்பு,அருள்,அறிவு வடிவினன்
என்று எண்ணிப் சிந்திக்க அவரது
உண்மை வடிவான பேரொளிக் காட்சியைப் பெற்று முக்தி அடையலாம்.
இறைவழிபாட்டில் இதுவே உயர்ந்த நிலை.

உடல் இல்லாத உயிர்
ஆவி அல்லது பேய், பிசாசு.
உயிர் இல்லாத உடம்பு
பிணம்.
இரண்டும் ஒன்றுபட்டாலே இயக்கம்.
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது:-
உடலும், உயிரும் சேர்ந்தது உணர்வு.
உணர்வே அறிவு.அறிவே கடவுள்.
கடவுளே நீ. நீயே கடவுள்.
இதனைத்தான் வேதங்கள் கூறுகின்றன.

அறிவு அறிவின்மை
கலந்துள்ளவன் அஞ்ஞானி.
அறிவை ஒரே சிந்தனையில் குவிப்போன் விஞ்ஞானி.
தத்துவங்களை ஆய்ந்து தன்னையும், தனக்காதாரமான
இறைவனையும் அறிபவன் மெய்ஞ்ஞானி.
ஆக மூவர்க்கும் ஞானி எனும் பட்டம்
உடன் வருவதைக் கவனியுங்கள்.
இன்று அஞ்ஞானியாய் இருப்பவன்
நாளை விஞ்ஞானி. நாளைய மறுநாள் மெய்ஞ்ஞானி.
கால இடைவெளி மட்டுமே குறுக்கீடு. முயற்சி செய்தால் ஞானம் பெற்று இறைவனை அடையலாம்.

பிறந்த குழந்தைக்கு அவனது சுயகருமம்
இல்லை. நான்கு வயது வரை குழந்தைக்கு ஏற்படுகின்ற இன்ப துன்பங்களுக்குக் காரணம் தாயாரின் முன்வினைப் பயன்.
நான்கு வயது வரை தாயார் குழந்தையைச் சுமந்து செல்வாள்.
நான்கு வயது முதல் பதினோரு வயது வரை தந்தையின் முன்வினைக் கருமத்தால் குழந்தைக்கு நன்மை, தீமை உண்டாகும். இந்த வயது வரை குழந்தை பாதிக்கப் பட்டால் சுமந்து
செல்வோன் தந்தை.
பதினோறு வயது முதல் பதிமூன்று வரை தாய், தந்தை, பிள்ளை ஆகிய
மூவரின் முன் விளைவுகளால் இருவினைகள் அமையும்.
பதிமூன்று வயதுக்குமேல், சுயமாக
சிந்திக்கும் குழந்தைக்கு சுய கருமம் வேலை செய்யும். இதுவே
வேதங்கள் கூறும் விளக்கமாகும்.
                                                                      மதி என்பது மனம். மனதைப் பயன்படுத்தி ஒரு வேலையைச் செய்கிறீர். முடிவு தோல்வியாகிறது. நன்றாகச் சிந்திக்கிறீர். சரியாகவே செய்துள்ளீர்.
மீண்டும் முயற்சி செய்கிறீர். தோல்வியே. ஓர் அனுபவ சாலியிடம் கேட்கிறீர்.அவரும் சரியாகத்தான் செய்துள்ளீர்
என்கிறார். மன உறுதியோடு மூன்றாம் முறையும் முயற்சிக்கிறீர்.
முடிவு தோல்வியே.
வள்ளுவர் நினைவுக்கு வருகிறார்.
விதியைக் காட்டிலும் மிகப் பெரிய
சக்தி வேறென்ன உள்ளது. அறிவைப் பயன் படுத்தி ஒரு செயலைச் செய்தால் விதி எதிர்ப்பக்கம் வந்து தடுக்கிறது.
விதிக்கப்பட்டது விதி. அதனை அனுபவித்தே ஆக வேண்டும். முயற்சி என்பது மதி. இருவிதப் பயன்களைத் தருவது மதி.
"ஊழிற் பெருவலி யாவும் மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்." (குறள்).

அபிமானம் என்றால்
பற்று என்று பொருள்.
இறைவனை உணர தேகாபிமானத்தை விடவேண்டும்.
தேகங்கள், உலகியல் விவகாரத்திற்கு மூன்று உள்ளன.
1.தூலதேகம்:- இதற்கு ஆறுவகை
நிலைகள் உள்ளன.
அ) தாயின் கருவில் இருத்தல்.
ஆ)பிறத்தல்.
இ)வளர்தல்.
ஈ)தோற்றம் மாறுதல்.
உ)தேய்தல். (நரை,பார்வைக் குறைதல், வயோதிக நிலை அடைதல்).
ஊ)மரணம் அடைதல்.
இவற்றை எல்லாம் பார்க்கும் ஆத்மா அல்லது உயிர் நீ! உனக்கு பிறப்பு இறப்பு இல்லை.

இரண்டாவதாக சூக்கும
தேகம்.இதன் மீதும் பற்று கொள்ளுதல் கூடாது.
இதில் இருபதுதத்துவங்கள் அடங்கும்.
மனம்,அறிவு,மெய்,வாய்,கண், மூக்கு,செவி எனும் ஏழினைப் பற்றித் தெரிந்து கொண்டால் போதும்.
மனம்:- இதற்கு ஆறு வேலைகள் உள்ளன.
1.நினைப்பு.
2.மறப்பு.
3.சுகப்படுதல்.
4.துக்கப் படுதல்.
5.எண்ணங்களால் விரிதல்.
6.எண்ணங்களால் சுருங்குதல்‌.
இந்த ஆறையும் பார்க்கும் ஆத்மா நீ.
மனதின் இந்தச் செயல்களைப் பார்ப்பவனே நீ.மனம் நீ அல்ல.
மனமும் அறிவும் நாணயத்தின்
இரண்டு பக்கங்களைப் போன்றது.
தடுமாறும் போது அதற்கு மனம்
என்று பெயர். தெளிவாக இருக்கும் போது அறிவு என்று பெயர்.

மூன்றாவதாக இருப்பது
காரண தேகம்.ஆத்மாவை முக்தி அடையாமல் தடுப்பது இறைஞானம்இல்லாமை.
இதையே அஞ்ஞானம் என்பர்.

குருவின் துணையோடு தேக தத்துவங்களான முப்பத்தி ஆறையும் கடந்தாலே கடவுளோடு
இணைய முடியும்.

5 comments:

  1. Hmm it sеems lіike your website ate my first comment (it was sᥙper
    long) sso I guess Ι'll jist sum it up what I submitted andd ѕay, I'm thoroughlʏ enjoying yiur blog.
    I as weⅼl am an aspiring blog writer but I'm still new to the
    whole thing. Do you have any helpful hints for novic blog writeгs?
    I'd ԁefinitely appreciate it.

    ReplyDelete
  2. magnificent pօints altogеther, you juyst gained a brand new reader.

    What mayy yoս recommend іn regards to your puⅼish that you simply mаde some days in the past?
    Any certain?

    ReplyDelete
  3. I really like what you guys tend to be up too.
    This kind of clever work and reporting! Keep up the good works guys I've incorporated
    you guys to my blogroll. Woah! I'm really enjoying the template/theme of this blog.
    It's simple, yet effective. A lot of times it's very hard to get that "perfect balance" between user friendliness and visual appeal.
    I must say you've done a very good job with this. Also, the blog loads very fast for
    me on Chrome. Superb Blog! Woah! I'm really loving the template/theme of
    this website. It's simple, yet effective. A lot of times it's very difficult to
    get that "perfect balance" between user friendliness and appearance.
    I must say you've done a great job with this. Also, the blog loads very
    fast for me on Firefox. Outstanding Blog! http://aoc.com/

    ReplyDelete
  4. you're in reality a good webmaster. The web site loading velocity is amazing.
    It kind of feels that you're doing any unique trick.

    Also, The contents are masterpiece. you have done
    a wonderful job on this subject!

    ReplyDelete
  5. I would like to thank you for the efforts you've put in writing this site.

    I'm hoping to view the same high-grade blog posts from you in the future as well.
    In fact, your creative writing abilities has motivated me to get my
    own website now ;)

    ReplyDelete

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...